மீண்டும் மீண்டுமா.. சித்திரை 1 தமிழ் புத்தாண்டு! அறிவித்த தமிழக அரசு! தை 1 தமிழ் புத்தாண்டு இல்லையா?
சென்னை: சித்திரை முதல் நாளுக்கு பதில் தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கருணாநிதி முழங்கிய நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினும் தை 1ஐயே தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகிறார்.
இந்நிலையில் சித்திரை 1ஐ அதாவது 14.04.24 ஞாயிற்றுக்கிழமை தமிழ் புத்தாண்டு விடுமுறை என தமிழக அரசின் விடுமுறை பட்டியலில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சித்திரை முதல் நாளையே தமிழ் புத்தாண்டாக திமுக அரசு ஏற்றுக்கொண்டதா என்ற விவாதம் எழுந்துள்ளது.

2008ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா உரையில் தை 1ஐ தமிழ் புத்தாண்டாக அறிவிக்க வைத்தவர் கருணாநிதி. அதுமட்டுமல்ல 'தமிழ்நாடு தமிழ்ப் புத்தாண்டுச் சட்ட முன் வடிவை'யும் சட்டசபையில் கொண்டு வந்தார். காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.எஸ்.எஸ். ராமனும், பா.ம.க. சார்பில் கி.ஆறுமுகமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நன்மாறனும், இந்தியக் கம்யூனிஸ்ட் சார்பில் சிவபுண்ணியமும், மதிமுக சார்பில் மு.கண்ணப்பனும், விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கு.செல்வப்பெருந்தகையும் (அப்போது விசிகவில் இருந்தார்) அந்த மசோதாவினை வரவேற்றுப் பேசி ஆதரித்தனர்.
இந்நிலையில் 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்ததும் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 23-8-2011 அன்று பேரவையில் பேசிய போது, "தமிழ்ப் புத்தாண்டை தை மாதம் தொடங்க எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் சித்திரையில் தொடங்குவதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. கருணாநிதி தன் சுய விளம்பரத்துக்காக, மக்கள் மன உணர்வைப் புண்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்ட 'தமிழ்நாடு தமிழ்ப் புத்தாண்டுச் சட்ட முன் வடிவை' ரத்து செய்யப்பட்டு விட்டது" என்றார்.

சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் 9-1-2015 அன்று நடைபெற்ற திமுக பொதுக் குழுவில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒன்று தான், பொங்கல் திருநாளை - தமிழ்ப் புத்தாண்டாக தமிழர்கள் உள்ளம் தோறும் உவகைப் பெருக்குடன் இல்லந்தோறும் இன எழுச்சியோடு கொண்டாட வேண்டும் என்பதாகும்.
இப்படி கருணாநிதியால் தை 1ஐ தமிழ் புத்தாண்டாக அறிவிக்க வேண்டும் என கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு 2006-2011 திமுக ஆட்சியில் 'தமிழ்நாடு தமிழ்ப் புத்தாண்டுச் சட்ட முன் வடிவை'யும் கொண்டு வந்திருந்தார்.
இப்படிப்பட்ட சூழலில் இன்றைய தினம் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா பெயரில் வெளியாகியுள்ள 2024ஆம் ஆண்டு அரசு பொது விடுமுறை அறிவிப்பாணையில் 14.04.24 ஞாயிற்றுக்கிழமை தமிழ் புத்தாண்டு / அம்பேத்கர் பிறந்தநாள் விடுமுறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது திமுக அரசுக்கும், திமுகவினருக்கும் தர்மசங்கடமான சூழலை உருவாக்கியிருப்பதாக தெரிகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications