தமிழ்நாடு சிறு குறு தொழில் நிறுவனங்களின் 5 கோரிக்கைகள்.. ஒன்றை ஏற்றுக்கொண்டது தமிழக அரசு
சென்னை: 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் அக்டோபர் 16 ஆம் தேதி போராட்டத்தை தமிழ்நாடு சிறு குறு தொழில் நிறுவனங்கள் அறிவித்துள்ள நிலையில், ஒரு கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.
பீக் ஹவர்ஸ் மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். மின்சார நிலைக்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். மின் கட்டண உயர்வை ரத்து செய்து பழைய கட்டண முறையை அமல்படுத்த வேண்டும். வருடா வருடம் ஒரு சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும். சோலார் நெட்வொர்க்கிங் கட்டணத்தை முற்றிலுமாக நீக்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளைவலியுறுத்தி சிறு குறு தொழில் நிறுவனங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் தான், தமிழ்நாடு சிறு குறு தொழில் நிறுவனங்களின் கோரிக்கைகளில் ஒன்றை தமிழக அரசு ஏற்றுள்ளது. 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் அக்டோபர் 16 ஆம் தேதி போராட்டத்தை தமிழ்நாடு சிறு குறு தொழில் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த நிலையில்தான், கோரிக்கைகளில் ஒன்றை தமிழக அரசு ஏற்றுள்ளது. 3 B ல் இருந்து 3 (A1) tariff க்கு மாற்றுவதற்கு 12 kw கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களும் நடைமுறைப்படுத்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குடிசை மற்றும் மின் நுகர்வோருக்கு மின் இணைப்பு (12 kw load tariff 3 A(1) அளிக்கப்பட வேண்டும். தாழ்வழுத்த நிலை கட்டணத்தை 3 B tarrif இல் இருந்து 3 A (1) அடிப்படையில் மாற்ற வேண்டும். தாழ்வழுத்த நிலை கட்டணத்தை பழைய கட்டண முறையாக அமல்படுத்த தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவை தமிழ்நாடு மின்சார வாரியம் பின்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறு குறு மற்றும் நடுத்த நிறுவனங்களின் பிரதான கோரிக்கையாக பீக் ஹவர்ஸ் கட்டண முறையை ரத்து செய்ய வேண்டும் என்பது பிரதான கோரிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில், தான் தாழ்வழுத்த நிலை கட்டணத்தில் பழைய நடைமுறையே தொடரும் என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications