"சிறப்பு" கனமழை பாதிப்பை தமிழக அரசு சிறப்பாக கையாள்கிறது.. பாராட்டும் பிரேமலதா விஜயகாந்த்!
சென்னை: கனமழை பாதிப்புகளை தமிழக அரசு சிறப்பாக கையாண்டு வருவதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பாராட்டி உள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கினாலே சென்னையில் வெள்ளம் வருவது வாடிக்கையாக இருந்தது. நவம்பர் மாத இறுதியில் தொடங்கும் கனமழையால், சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர் தேங்குவது வாடிக்கையாக இருந்து வந்தது.
ஆனால் நடப்பாண்டில் வரலாறு காணாத அளவிற்கு கனமழை பெய்தாலும், தமிழக அரசு மேற்கொண்ட மழைநீர் வடிகால் பணிகளால் தண்ணீர் எங்கும் தேங்கவில்லை என்று மக்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

மழைநீர் தேங்கவில்லை
வடசென்னை, முகலிவாக்கம், ஓட்டேரி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் ஆங்காங்கே தேங்கினாலும் மாநகராட்சி அதிகாரிகள் மூலம் விரைந்து அகற்றப்பட்டு வருகிறது. அதேபோல் சென்னையின் நகர்ப் பகுதிகளில் மீதமுள்ள மழைநீர் வடிகால் பணிகள் விரைந்து முடிக்கப்படும் எனவும், அடுத்த ஆண்டு எங்கும் மழைநீர் தேங்காத நிலை உருவாக்கப்படும் என்று அமைச்சர்கள் உறுதி அளித்துள்ளனர்.

பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
இந்த நிலையில் மழை பாதிப்புகளை தமிழக அரசு சிறப்பாக கையாண்டுள்ளதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை எம்.கே.பி.நகர் பகுதியில் தேமுதிக நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட கட்சியின் பொருளாளரான பிரேமலதா விஜயகாந்த் மணமக்களை வாழ்த்தினார்.

தமிழக அரசுக்கு பாராட்டு
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில், சென்னையில் கடுமையான வெள்ளத்தை பார்த்துள்ளோம். தற்போது இரவு நேரத்தில் மழை வந்தாலும், பகல் நேரத்தில் தண்ணீர் தேங்குவதில்லை. தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது. எங்காவது மழைநீர் தேங்கியுள்ளதாக புகார் அளித்தாலும், உடனடியாக ராட்சத இயந்திரங்கள் வைத்து தண்ணீரை அகற்றிவிடுகின்றனர். அதுமட்டுமல்லாமல் இவ்வளவு மழை பெய்தும், எந்தப் பகுதிகளிலும் மின்சாரம் தடைபடவில்லை. இந்த மழை முடிவடைந்த பின்னர், மழைநீர் வடிகால் பணிகளை முடித்து அடுத்த ஆண்டு இன்னும் சிறப்பாக செயல்படுவோம் என்று தெரிவித்துள்ளனர்.

தேமுதிக தொண்டர்களுக்கு வேண்டுகோள்
அதற்கு தேமுதிக சார்பாக பாராட்டுக்கள். அதேபோல் சீர்காழியில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்துள்ளது. விவசாய நிலங்களும், மக்களும் அங்கு அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேமுதிக தொண்டர்கள் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
-
Duraimurugan: தவாக வேல்முருகன் விலகியது குறித்த கேள்விக்கு! துரைமுருகனின் face expression-ஐ பாருங்க -
"6 தொகுதிகளிலும் ஜெயித்திருப்போம்!" 2021 தேர்தல் குறித்து சிபிஎம் பெ.சண்முகம் அதிரடி விளக்கம்! -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
சட்டசபை தேர்தலில் முன்னாள் அமைச்சர் பொன்முடி போட்டியில்லை? திருக்கோவிலூர் தொகுதியில் மகனுக்கு சீட் -
Election Exclusive: கூட்டணியில் ’சிவப்பு’ சிக்னல்.. தோழர்களை கூலாய் ஹேண்டில் செய்யும் ஸ்டாலின்! பரபரப்புக்களுக்கு எண்ட்! -
திமுகவில் குறைந்த எண்ணிக்கை தொகுதியால் வலி இருக்கிறது! ஆனாலும் 234-லிலும்...! திருமாவளவன் வேதனை -
என்னை முதல்வராக்கினால்! பெண்களுக்கு ரூ 1 லட்சம்! ஆண்டிப்பட்டி திமுக எம்எல்ஏ பேச்சால் கோபத்தில் தலைமை -
5 தொகுதிகளுக்கு சரி.. ஆனால் சென்னையில் 2 தொகுதிகள் கொடுங்க.. திமுகவுக்கு சிபிஎம் விதித்த நிபந்தனை! -
திமுக கூட்டணியில் 3 சீட் கேட்டுள்ளோம்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம்- எஸ்டிபிஐ தலைவர் தகவல் -
கோவை மாவட்டத்தில் 6 தொகுதிகளை கேட்கும் கூட்டணி! திமுகவுக்கு நிம்மதி கொடுத்த அந்த ரிப்போர்ட்! -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு?












Click it and Unblock the Notifications