"ரோப் கார்".. இது மட்டும் வந்தா கூட்டம் அள்ளும்.. 5 மலைக்கோவில்களுக்கு செம வசதி.. சேகர்பாபு திட்டம்
சென்னை: தமிழ்நாட்டில் 5 மலைக்கோவில்களுக்கு ரோப் கார் வசதி ஏற்படுத்தும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்த உள்ளது.
தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற கோவில்களில் பழனி முருகன் கோவிலும் ஒன்று. வருடா வருடம் இந்த கோவிலுக்கு பல கோடி பேர் சென்று வழிபாடு நடத்துவது உண்டு. பழனி மலை, இடும்பன் மலை ஆகிய கோவில்களை பார்க்க பலர் வருவது உண்டு.
இந்த கோவிலில் ஏற்படுத்தப்பட்டு இருக்கும் ரோப் கார் வசதியும், வின்ச் டிரைன் வசதியும் கூட இங்கு பக்தர்கள் அதிக வர ஒரு வகையில் காரணம். மக்களை அதிகம் ஈர்க்கும் விஷயமாக இந்த ரோப் கார் வசதி உள்ளது.

ரோப் கார் வசதி
அஸ்திவாரத்தில் இருந்து நேராக கோவிலுக்கு செல்லும் வகையில் இந்த ரோப் கார் வசதி அமைக்கப்பட்டுள்ளது. இதில் பயணிப்பதற்காகவே மக்கள் பலர் இங்கு வருவது உண்டு. இந்த நிலையில் தமிழ்நாட்டில் 5 மலைக்கோவில்களுக்கு ரோப் கார் வசதி ஏற்படுத்தும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்த உள்ளது. இது தொடர்பான திட்டத்தில் உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

உறுதி
ரோப் கார் வசதி ஏற்படுத்தப்பட போகும் 5 கோவில்களில் திருச்சி மலைக்கோட்டை கோவில் ஒன்று என்பது உறுதியாகி உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். இது போக பழமுதிர்சோலை உள்ளிட்ட சில மலை கோவில்களிலும் ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

ஏன்
மக்களை அதிகம் ஈர்க்கும் வகையிலும், வருமானத்தை அதிகரிக்கும் வகையிலும், சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையிலும் ரோப் கார் வசதி கொண்டு வரப்பட உள்ளது. இது தமிழ்நாட்டின் வருமானத்தை பெருக்கும். கொரோனாவிற்கு பின் பல்வேறு துறைகள் மூலம் வருமானத்தை பெருக்கும் முடிவில் தமிழ்நாடு அரசு உள்ளது. இதில் சுற்றுலாத்துறையும் ஒன்று.

டாஸ்மாக்
டாஸ்மாக் வருமானத்தை மட்டுமே நம்பி இருக்காமல், சுற்றுலாத்துறை போன்ற மற்ற துறைகளில் வருமானத்தை பெருக்கும் முடிவில் தமிழ்நாடு அரசு உள்ளது. தமிழ்நாட்டில் பல சுற்றுலா களஞ்சியங்கள் உள்ளன. இப்படி சுற்றுலாத்தலங்களை புதுப்பிப்பது, புதிய வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் தமிழ்நாடு அரசு வருமானம் ஈட்டும் முடிவில் உள்ளது.












Click it and Unblock the Notifications