மீண்டும் மழை பெய்தாலும் எதிர்கொள்ள ரெடி! இன்று இரவுக்குள் எல்லா ஏரியாவிலும் மின்சாரம்: சிவ்தாஸ் மீனா
சென்னை: சென்னையில் மீண்டும் மழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என தமிழக அரசின் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்த நிலையில் அதனை வெளியேற்றும் வேலைகளிலும், அங்குள்ள மக்களை மீட்கும் வேலைகளிலும் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மீட்பு பணிகளை பார்வையிட்ட தலைமை செயலர் சிவதாஸ் மீனா செய்தியாளர்களைச் சந்தித்தார்.

சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக அரசின் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, "சென்னையின் 6 மண்டலங்களில் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. 0.04% மட்டுமே மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும். ஒருசில இடங்களை தவிர மற்ற இடங்களில் இன்று இரவுக்குள் மின்சாரம் வழங்கப்படும். சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து, மின்சாரம், பால் உள்ளிட்ட சேவைகள் சீராக உள்ளது.
பள்ளிக்கரணையில் சில பகுதியில் மட்டும் தண்ணீர் இருக்கிறது. ஆனால் போக்குவரத்து தடைபடவில்லை. போக்குவரத்து, பால், குடிநீர் விநியோகம் சீரானது. வேளச்சேரியை பொறுத்தவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு இலவசமாக சர்வீஸ் செய்ய வாகன நிறுவனங்களை வலியுறுத்தியுள்ளோம். சென்னையில் மீண்டும் மழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது.
வரும் திங்கட்கிழமை முதல் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் செயல்படும். ஒருசில பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீர் இன்று இரவு அல்லது நாளைக்குள் அகற்றப்படும். வடசென்னையின் சில பகுதிகளில் மட்டும் மழைநீர் தேங்கியுள்ளது. மயிலாப்பூரில் ஒரு பகுதியைத் தவிர எந்தப் பகுதியிலும் மின் விநியோக பிரச்சனை இல்லை. மயிலாப்பூர் தபால் அலுவலக பகுதியில் மட்டும் மழைநீர் தேங்கியுள்ளது. மற்ற பகுதிகளில் மழைநீர் முழுவதும் அகற்றப்பட்டுள்ளது. 95% அதிகமான பகுதிகள் இயல்புநிலைக்கு வந்துவிட்டன.
நேற்று நிவாரண முகாம்களில் 41,406 பேர் இருந்தனர். இன்று 18,780 பேர் மட்டுமே உள்ளனர். நேற்று 800 இடங்களில் தண்ணீர் தேங்கி இருந்ததாக புகார்கள் வந்தன. இன்று 343 இடங்களில் மட்டுமே தண்ணீர் தேங்கி உள்ளது. சென்னை மாநகரில் 0.43% மட்டுமே மின்வெட்டு உள்ளது. 22 சுரங்கப்பாதைகளில் 20 சுரங்கப்பாதைகள் செயல்பட தொடங்கிவிட்டன. சென்னையில் 488 பேருந்து வழித்தடங்கள் உள்ளன. அதில் 39 வழித்தடத்தில் மட்டுமே சிறிது நீர் உள்ளது. எனினும் அங்கும் போக்குவரத்து சீராக உள்ளது" என்றார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications