"சம வேலை சம ஊதியம்" ஆசிரியர்கள் புத்தாண்டை உவகையுடன் கொண்டாடுங்கள்.. குழு அமைத்த மு.க.ஸ்டாலின்!
சென்னை: சம வேலை சம ஊதியம் கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து 6வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சம வேலை சம ஊதியம் கோரிக்கை குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு குழு அமைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நிதித்துறை செயலர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் கல்வித்துறை நிர்வாகிகளும் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு அளிக்கும் பரிந்துரைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009ம் ஆண்டு மே மாதம் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் மாதத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனால் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

பேச்சுவார்த்தை தோல்வி
இந்த ஊதிய முரண்பாடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த இடைநிலை ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்தது. அதன்படி, பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளருடன் ஆசிரியர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இதனால் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை தொடர்ந்து வந்தனர்.

6ம் நாளாக தொடரும் போராட்டம்
இதனிடையே, போராட்டம் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இதுவரை 147 இடைநிலை ஆசிரியர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் 6வது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது.

குழு அமைத்த தமிழக அரசு
இந்த நிலையில் சம வேலை சம ஊதியம் என்ற இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து பரிந்துரை வழங்க குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சம வேலை சம ஊதியம் என்ற இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து ஆய்வு நடத்த நிதித்துறை செயலர் தலைமையில் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர், தொடக்கக் கல்வி இயக்குநர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு ஒத்துழைப்பு
இந்த குழு ஆய்வு செய்து அளிக்கும் பரிந்துரைகளை சம வேலை சம ஊதியம் கோரிக்கை தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் 2023ம் ஆண்டின் தொடக்கத்தினை உவகையுடன் கொண்டாடுங்கள். மக்கள் வாழ்வை வளம் பெற செய்வதற்கான பெரும் பணியில் அரசுடன் ஒத்துழைத்து செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குழு அமைத்துள்ளது தொடர்பாக ஆசிரியர் சங்க நிர்வாகிகள் என்ன முடிவு எடுக்க உள்ளார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்?












Click it and Unblock the Notifications