தமிழகத்திலும் ஒரே நாடு ஒரே ரேஷன் - நெல்லை, தூத்துக்குடியில் முதல் கட்டமாக அமல்: அரசாணை வெளியீடு
சென்னை: தமிழகத்திலும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஒரே நாடு- ஒரே ரேஷன் திட்டம் ஜூன் மாதம் முதல் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் அறிவித்திருந்தார். முதல் கட்டமாக 16 மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் ராம்விலாஸ் பஸ்வான் கூறியிருந்தார்.

இந்நிலையில் தமிழகத்திலும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தப்படும் என்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ரேஷன் அட்டைதாரர்கள் தமிழகத்தில் எந்த ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முதல் கட்டமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது; விரைவில் பிற மாவட்டங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசின் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications