அறிவித்து கொஞ்ச நாள்தானே ஆகிறது.. தமிழக அரசு சிக்ஸர்.. செம வேகம்.. மாணவர்களை தேடி வருது லேப்டாப்
சென்னை: தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் அக்டோபரில் தொடங்க உள்ளது. முதல் கட்டமாக, சுமார் 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டத்திற்கான ஒப்பந்தங்களை டெல் (Dell) மற்றும் ஏசர் (Acer) நிறுவனங்கள் பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை, மாணவர்களுக்கான மடிக்கணினி வழங்குதலில் முக்கியப் பங்காற்றும்.

மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள்
வழங்கப்படும் மடிக்கணினிகள், இன்டெல் கோர் ஐ3 (Intel Core i3) அல்லது ஏஎம்டி ரைசன் (AMD Ryzen) செயலிகளுடன் (processors) வரும். இவை, மேம்பட்ட செயல்திறனை உறுதி செய்யும். மேலும், 8ஜிபி ரேம் (RAM), 14 அல்லது 15.6 இன்ச் திரைகள் (displays) மற்றும் வேகமான தரவு பரிமாற்றத்திற்காக யுஎஸ்பி-சி (USB-C) போர்ட் ஆகியவை இந்த மடிக்கணினிகளில் இடம்பெறும்.
நான்கு மையச் செயலிகள் (quad-core processors) இருப்பதால், மாணவர்கள் 4K வீடியோக்களைப் பார்க்கவும், திட்டப் பணிகளைத் திருத்தவும் முடியும். இத்துடன், இலவச மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் 365 சந்தாவும் (subscription) சேர்க்கப்பட்டுள்ளது.
கல்லூரி மாணவர்களுக்கான தமிழ்நாட்டின் இலவச மடிக்கணினி திட்டத்திற்கான மடிக்கணினி செயல்திறன் மற்றும் வகையை வரையறுக்க அண்ணா பல்கலைக்கழகம், ஐஐடி-மெட்ராஸ், என்ஐசி, டிஎன்இஜிஏ மற்றும் எல்காட் ஆகியவற்றின் நிபுணர்களைக் கொண்ட தொழில்நுட்ப தரநிலைக் குழு சமீபத்தில் அமைக்கப்பட்டது.
இலவச லேப்டாப் திட்டம்
இந்தக் குழு இதுவரை ஏழு கூட்டங்களை நடத்தி, செயல்திறன், சேமிப்பு, மென்பொருள், பேட்டரி மற்றும் வன்பொருள் தரநிலைகள் உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்ப specificationகளை இறுதி செய்துள்ளது. வழங்கப்பட உள்ள கணினிகளுக்கான பொருத்தமான பண்புகளை அடையாளம் காண புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனங்களுடனும் ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன.
2025-26 மாநில பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து சமீபத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் இது பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. பட்ஜெட் அறிவிப்பின்படி, அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகளை விநியோகிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக டெண்டர் மதிப்பீட்டுக் குழுவும் ஏல ஆவணங்களைத் தயாரித்துள்ளது, ஏலங்கள் இறுதி செய்யப்பட்டவுடன் கொள்முதல் தொடங்கும். மாணவர்களுக்கு சரியான நேரத்தில் கணினிகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக மடிக்கணினி விநியோகத் திட்டம் வேகமாக செயல்படுத்தப்பட உள்ளது.
இலவச லேப்டாப் திட்டத்திற்கு காரணம் என்ன?
இந்த திட்டத்தை அறிவிக்க பல காரணங்கள் உள்ளன.
1. தமிழ்நாடு அரசு ஏஐ தொடர்பான பாடத்திட்டங்களை கொண்டு வருவதாக அறிவித்துள்ளது. இதை படிக்க லேப்டாப் அவசியம்.
2. தமிழக மாணவர்களை உலக தரத்திற்கு கொண்டு செல்ல ஏற்கனவே நான் முதல்வன் திட்டம் அமலில் உள்ளது. இது போன்ற திட்டங்களில் மாணவர்கள் சிறப்பாக செயல்பட லேப்டாப் அவசியம்.
3. தேசிய அளவில் மட்டுமின்றி உலக அளவில் பல நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு பள்ளி மாணவர்கள் கொண்டு செல்லப்படுகிறார்கள். அவர்கள் பின்தங்காமல் இருக்க லேப்டாப் அவசியம்.
4. அதோடு மிக முக்கியமாக அரசு பள்ளி மாணவர்களுக்கு வசதியாக தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையான வசதிகள், வாய்ப்புகள் தேவை. அதற்கு லேப்டாப் அவசியம்.
5. அரசு லேப்டாப் தர வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கையாக வைத்தனர்.
6. அதிமுக காலத்தில் திட்டம் நின்று போனாலும் திமுக தரவில்லை என்ற பிம்பம் இருந்தது. அது திமுக மீது குறையாக இருந்தது. இதை சரியாகி உள்ளது.
7. அதோடு டேட்டாபடி இந்த திட்டத்தை கொண்டு வந்ததால் ஏற்கனவே பல லட்சம் பேர் பலனடைந்து உள்ளனர். மீண்டும் கொண்டு வந்தால் அது பல லட்சம் பேருக்கு உதவும்.
8. நான் முதல்வன் போன்ற திட்டங்கள் மூலம் பல தமிழ்நாடு மாணவர்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஆனால் அவர்களுக்கு லேப்டாப் இல்லாத காரணத்தால் சிரமப்படுகின்றனர். இப்படிப்பட்ட மாணவர்களுக்கு லேப்டாப் பெரிய உதவியாக இருக்கும். இதையடுத்தே மாணவர்களுக்கு சரியான நேரத்தில் கணினிகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக மடிக்கணினி விநியோகத் திட்டம் வேகமாக செயல்படுத்தப்பட உள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications