சொத்துக்கள் வாங்கி பத்திரப்பதிவு.. தமிழக பதிவுத்துறை சக்சஸ்.. ஒரே நாளில் இத்தனை கோடியா? செம வருவாய்
சென்னை: அரசுக்கு வருவாய் ஈட்டித்தரும் துறையில் முதன்மையானதும், முக்கியமானதும் பத்திரப்பதிவு துறையாகும்.. அந்தவகையில், மீண்டும், ஒரே நாளில் மிகப்பெரும் வசூலிட்டி புதிய சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து செய்திக்குறிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலானோர், புதிதாக ஒரு வீடு, நிலம் வாங்கும்போதும், அதற்கான பத்திரப்பதிவு செய்யும்போதும் நல்ல நேரம், சுபமுகூர்த்த நாட்களை பார்ப்பது வழக்கமாகும். முக்கியமாக, சுபமுகூர்த்த தினத்துக்காக பத்திரப்பதிவு கூட செய்யாமல் எத்தனையோ பேர் காத்திருக்க செய்கிறார்கள்.

பத்திரப்பதிவு: அதுமட்டுமல்லாமல், சுபமுகூர்த்த தினத்தில் ஒரே நேரத்தில் அதிகமானவர்கள் பத்திரப்பதிவு செய்ய முயலும்போது கூட்ட நெரிசல் ஏற்படும். இதனால், பத்திரப்பதிவு செய்ய முடியாமலும் போகும் சூழலும் ஏற்பட்டுவிடுகிறது. இதுபோன்ற சிக்கல்களை தவிர்ப்பதற்காகவே, குறிப்பிட்ட சுபமுகூர்த்த தினங்களில் கூடுதலாக பத்திரவுப்பதிவுக்கான டோக்கன்கள் சார்பதிவாளர் அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் சுமார் 582 சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வரும்நிலையில், முகூர்த்த நாட்களில் அதிக அளவு பத்திரப்பதிவு நடைபெறும் என்பதால் அந்த நாட்களில் அதிக அளவிலான டோக்கன் வழங்கப்படுகின்றன.
கூடுதல் வருவாய்: அந்தவகையில், நேற்று ஞாயிற்றுக்கிழமையும் மாநிலம் முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்பட்டன.. இதனால் பத்திரப்பதிவு அலுவலகங்கள் படுபிஸியாக காணப்பட்டன. காலையிலேயே ஏராளமானோர் சார் பதிவாளர் அலுவலகங்களில் குவிந்துவிட்டனர். இதனால், 238.15 கோடி வருவாய் கிடைத்துள்ளது..
இது தொடர்பாக பத்திரப்பதிவு துறை செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ''2024-25ம் நிதியாண்டில் கடந்த 05.12.2024 அன்று ஒரே நாளில் இதுவரையில் இல்லாத அளவில் அரசுக்கு ரூ.238.15/- கோடி வருவாய் பதிவுத்துறையில் ஈட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த 31.1.2025 அன்று 23,061 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு, இதே நிதியாண்டில் இரண்டாவது முறையாக அரசுக்கு ரூ.231.51/- கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது'' என்று கூறப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஏமாற்றம்: நேற்று ஞாயிற்றுக்கிழமை பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்த போதிலும், பல்வேறு மாவட்டங்களில் சில பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கவில்லையாம்.. அவை பூட்டியே கிடந்ததாகவும், இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு காரணம், தமிழ்நாடு பதிவுத்துறை பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பதிவுத்துறையில் காலியாக உள்ள 60 சதவீத பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சங்க நிர்வாகிகள் கூறியிருந்தனர்.. இதனால், சில பத்திரப்பதிவு அலுவலகங்கள் நேற்று மூடப்பட்டிருந்தன. எனவே, இது தொடர்பாக துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
அரசுக்கு வருவாய்: பத்திரப் பதிவு செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன.. இதனால் கடந்த 9 மாதங்களில் மட்டும் 25 லட்சம் பேர் பத்திர பதிவு செய்துள்ளதாகவும், இதனால் அரசுக்கு ரூ.15,582 கோடி வருவாய் கிடைத்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications