கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?

Subscribe to Oneindia Tamil

முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, தமிழ்நாட்டின் மிக முக்கிய நிதி ஆதாரங்களை முறைப்படுத்துவதிலும், வருவாயைப் பெருக்குவதிலும் தற்போது தீவிரமான அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்கள், பீர் மற்றும் ஒயின் ஆகியவற்றின் மீது புதிதாக கூடுதல் கட்டணத்தை (Additional Fee) அரசு அதிரடியாக விதித்துள்ளது.

இந்த புதிய கொள்கை முடிவின் மூலம், அரசுக்கு ஆண்டுக்குச் சுமார் ரூ.600 கோடி முதல் ரூ.1,000 கோடி வரை கூடுதல் வருவாய் நேரடியாகக் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகளில் மதுபானம் உயருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Vijay Tasmac Liquor Tamil Nadu New Liquor Fee CM Vijay Liquor Tax TASMAC Additional Fee IMFS Beer Wine Extra Charge Tamil Nadu Revenue Boost 2026 Vijay Government Excise Duty Liquor Input Cost Formalization TASMAC Price Hike No Tamil Nadu Non-Tax Revenue CM Vijay Financial Measures IMFS Tamil Nadu Liquor Fee CM Vijay Revenue TASMAC Additional Charge Excise Duty Hike

கள்ளச்சந்தைக்கு முற்றுப்புள்ளி

இந்த அதிரடி கட்டண விதிப்புக்கு பின்னால் ஒரு மிக முக்கிய வர்த்தக காரணம் ஒளிந்துள்ளது. மதுபானத் துறை வட்டாரங்களின்படி, இந்த புதிய கட்டணமானது உண்மையில் உற்பத்தியாளர்களால் ஏற்கனவே தங்களின் தயாரிப்பு மற்றும் விற்பனை விலையில் சேர்க்கப்பட்டிருந்த'இன்புட் காஸ்ட்' (Input Cost) தான், விஜய் அரசின் இந்த திடீர் கட்டண விதிப்புக்கு மைய காரணமாக உள்ளது.

இந்தத் தொகையானது முறைப்படி அரசு கணக்கிற்கு வராமல் விநியோகச் சங்கிலியில் உள்ள இடைத்தரகர்கள் கைக்குச் சென்று மறைமுகமாகச் நிதி பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. தற்போது கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய கட்டணம் மூலம், அந்தத் தொகை இடைத்தரகர்கள் கைக்குச் செல்வது முற்றிலுமாகத் தடுக்கப்பட்டு, நேரடியாக மாநில அரசின் கருவூலத்திற்குள் கொண்டு வரப்படும். இதன் மூலம் சிஸ்டத்தில் இருந்த நிதி கசிவுகள் அடைக்கப்பட்டு அரசுக்கு முறையான வருவாய் உறுதி செய்யப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

எவ்வளவு கட்டண உயர்வு

தமிழக அரசின் உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அவசர அரசிதழ் (Extraordinary Gazette) அறிவிப்பின்படி, இந்த புதிய கட்டண விகிதங்கள் உடனடியாக அமலுக்கு வருகின்றன.

புதிய விதிமுறைகளின்படி, இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களுக்கு (IMFS) ஒரு பெட்டிக்கு 90 ரூபாய் கூடுதல் கட்டணம் அரசு உற்பத்தியாளர்களிடம் இருந்து நேரடியாக பெறுகிறது. இதேபோல் ஒரு பீர் பெட்டிக்கு 40 ரூபாய் மற்றும் ஒயினுக்கு 20 ரூபாயை கூடுதல் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகையானது, உரிமம் பெற்ற உற்பத்தியாளர்கள் தங்களின் உற்பத்தி ஆலைகளில் இருந்து மதுபானப் பெட்டிகளை வெளியே கொண்டு செல்வதற்கு முன்பே கட்டாயமாக அரசுக்குச் செலுத்திவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒரு பெட்டி என்பது எவ்வளவு?

மதுபானத் துறையின் கணக்கீட்டின்படி, ஒரு நிலையான பெட்டி என்பது பல வகையில் வகைப்படுத்தப்படுகிறது.

IMFS மதுபானங்கள்: 9 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்டி (அதாவது 1 லிட்டர் பாட்டில்கள் 9 அல்லது 750 மில்லி பாட்டில்கள் 12 அல்லது 375 மில்லி பாட்டில்கள் 24 அல்லது 180 மில்லி பாட்டில்கள் 48 கொண்ட ஒரு அட்டைப்பெட்டி).

பீர் வகைகள்: 12 பாட்டில்கள் 650 மில்லி அல்லது 24 பாட்டில்கள் 325 மில்லி அல்லது 500 மில்லி அளவு கொண்ட 24 கேன்கள் (Cans) அடங்கிய ஒரு பெட்டி.

ரீடைல் விலை உயருமா?

இந்த புதிய கூடுதல் கட்டணத்தால் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களின் சில்லறை விலை (MRP) தற்போதைக்கு உயராது. சாமானிய மக்களின் கைகளைத் துளைக்காமல், அரசுக்கு எப்படி இந்த கூடுதல் வருவாய் கிடைக்கிறது என்பதன் பின்னணியில் இருக்கும் முக்கியக் காரணங்கள் இதோ.

இந்த புதிய கட்டணம் என்பது மதுபானங்களை உற்பத்தி செய்யும் ஆலைகளுக்கு (Manufacturers) விதிக்கப்பட்ட ஒரு 'உற்பத்தி நிலை' வரியாகும். மதுபானப் பெட்டிகள் தொழிற்சாலையை விட்டு வெளியேறும் முன்பே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இந்தக் கட்டணத்தை அரசுக்குக் கட்டாயமாகச் செலுத்திவிட வேண்டும்.

இது உற்பத்தி நிலையிலேயே நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்கப்படுவதால், டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் பாட்டில்களின் சில்லறை விற்பனை விலையில் (MRP) எந்த மாற்றமும் செய்யப்படாது.

தமிழ்நாட்டின் நிதிப் பற்றாக்குறையைச் சமன் செய்யப் பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் மீது கூடுதல் சுமையை ஏற்றக் கூடாது என் தமிழ்நாடு அரசு மிகவும் உறுதியாக உள்ளது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைக்கு அரசு வழங்கியுள்ள நேரடி உத்தரவின்படி, டாஸ்மாக் கடைகளில் எவ்வித விலை உயர்வும் இன்றி பழைய விலையிலேயே மதுபானங்கள் தொடர்ந்து தடையின்றி விநியோகிக்கப்படும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ரூ.48,344 கோடி டாஸ்மாக் வருவாய்

தமிழக அரசின் வரி சாரா வருவாயில் (Non-Tax Revenue) டாஸ்மாக் நிறுவனம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. கடந்த 2024-25 நிதியாண்டில் மட்டும் தமிழ்நாடு அரசு மதுபான விற்பனை மூலம் ரூ.48,344 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இதில் ரூ.11,020 கோடி கலால் வரியாகவும் (Excise Duty), ரூ.37,324 கோடி மதிப்பு கூட்டு வரியாகவும் (VAT) அரசுக்குக் கிடைத்துள்ளது.

இது 2023-24 ஆம் நிதியாண்டின் வருவாயான ரூ.45,856 கோடியை விட அதிகமாகும். தற்போது டாஸ்மாக் நெட்வொர்க் மூலம் ஒரு மாதத்திற்கு சுமார் 55 லட்சம் பெட்டி மதுபானங்களும், 27 லட்சம் பெட்டி பீர்களும் விற்பனையாகும் சூழலில், இந்த புதிய கட்டணம் மாநிலத்தின் நிதி நிலையை மேலும் வலுப்படுத்தும் என்று நிதியமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+