உஷார்.. தமிழகத்தில் 85% கொரோனாவுக்கு ஓமிக்ரான்தான் காரணம்.. அமைச்சர் மா.சு. வெளியிட்ட முக்கிய தகவல்
இப்போது வரும் பாதிப்பு எல்லாமே எஸ் ஜீன் பாதிப்பு தான் ஒமிக்ரான் அறிகுறி தான் என்பதால் தனியாக ஒமிக்ரான் பரிசோதனை செய்யப்படுவதில்லை என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் ஓமிக்ரான் பரிசோதனை இப்போது செய்யப்படவில்லை என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 85 சதவிகிதம் பேருக்கு ஓமிக்ரான் அறிகுறிதான் இருக்கிறது என்றும் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக உலக மக்களை தன் கைப்பிடிக்குள் வைத்துள்ளது கொரோனா வைரஸ். டெல்டா, டெல்டா பிளஸ் கொரோனா பரவிய நிலையில் கடந்த ஆண்டு நவம்பரில் இருந்து ஓமிக்ரான் வகை கொரோனா பரவத்தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரம் மட்டுமே இருந்தது. கடந்த 10 நாட்களுககு முன்பு வரை ஓமிக்ரான் பாதிப்பு 180 வரை மட்டுமே பதிவான நிலையில் இப்போது தினசரி பாதிப்பு 13 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதில் 85 சதவிகிதம் பேருக்கு ஓமிக்ரான் அறிகுறிதான் தென்படுவதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.

புதிய வைரஸ் பரவல்
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், தமிழகத்தில் ஓமிக்ரான் பரிசோதனை இப்போது செய்யப்படவில்லை, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 85 சதவீதம் ஓமிக்ரான் அறிகுறிதான் இருக்கிறது என்று தெரிவித்தார். இப்போது வரும் பாதிப்பு எல்லாமே எஸ் ஜீன் பாதிப்பு தான் ஒமிக்ரான் அறிகுறி தான் என்பதால் தனியாக ஓமிக்ரான் பரிசோதனை செய்யப்படுவதில்லை. புதிய வைரஸ் எல்லாம் பரவுகிறது என்று சொல்வதால் அதிக பாதிப்புள்ள கிளஸ்டர் ஏரியாக்களில் மட்டும் பாதிப்புகளை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கிறோம் என்று கூறினார்.

ஓமிக்ரான் அறிகுறி
தினசரி உறுதிப்படுத்தப்படும் தொற்றுகளின் எண்ணிக்கையில் 85 சதவிகிதம் எஸ் ஜீன் குறைபாடாகவும் மீதமுள்ள 15 சதவிகிதம் டெல்டா வகை கொரோனாவாகவும் இருக்கிறது. அந்தவகையில் எஸ் ஜீன் குறைபாடு கண்டறியப்பட்டு எந்த ஒரு அறிகுறியும் இல்லாதவர்களை 7 நாட்கள் வீட்டுத் தனிமையில் வைத்து மாநகராட்சி கண்காணித்து வருகிறோம்.

ஓமிக்ரான் உயிரிப்பு இல்லை
60 வயதுக்கு மேற்பட்ட இணை நோயாளிகள், அதிக பாதிப்பு உடையவர்களை மட்டும் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுவரை எஸ் ஜீன் குறைபாடு கண்டறியப்பட்டவர்களில் பலர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் என்று கூறிய அமைச்சர் சுப்ரமணியன், தமிழகத்தில் எஸ் ஜீன் குறைபாடு காரணமாக யாரும் உயிரிழக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
Recommended Video

அடுத்த தடுப்பூசி முகாம் எப்போது
பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாள் 15ஆம் தேதி சனிக்கிழமை என்பதால் இந்த வாரம் மெகா தடுப்பூசியை நடத்தாமல் அடுத்த வாரம் சனிக்கிழமை நடத்தலாமா என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications