தமிழகத்தில் அக்.16 முதல் ஆம்னி பேருந்துகள் சேவை இயக்கமா? முரண்பட்ட தகவல்களால் குழப்பம்!
சென்னை: தமிழகத்தில் அக்டோபர் 16-ந் தேதி முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என முதலில் அறிவிப்பு வெளியானது. இதனை ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மறுத்துள்ளதால் குழப்பம் நீடிக்கிறது.
கொரோனா லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட நிலையில் அனைத்து பொதுப் போக்குவரத்தும் முடக்கப்பட்டது. இதனையடுத்து லாக்டவுன் கட்டுப்பாட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் 10 பொய்களும்... கோவை முப்பெரும் விழாவில் பட்டியலிட்ட மு.க.ஸ்டாலின்
அரசு, தனியார் பேருந்துகள்
மேலும் பொதுப் போக்குவரத்துகளை இயக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய அரசு வெளியிட்டது. இதனடிப்படையில் அரசு, தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஆம்னி பஸ்கள்
இருப்பினும் ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இதனால் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தன.
அக் 16 முதல் இயக்கம் என அறிவிப்பு
இந்த நிலையில் மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றி நாளை மறுநாள் அக்டோபர் 16-ந் தேதி முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என்று அந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்ததாக தகவல்கள் தெரிவித்திருந்தன.
ஆம்னி இயக்கம் இல்லையாம்- குழப்பம்
ஆனால் இத்தகவலை தாங்கள் மறுப்பதாகவும் ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கத்தில் ஒருதரப்பு கூறியிருக்கிறது. இதனால் ஆம்னி பஸ்கள் அக்டோபர் 16 முதல் இயக்கப்படுமா? என்பதில் குழப்பம் நீடிக்கிறது.