ஜனாதிபதி திரவுபதி முர்மு வரும் 18-ந் தேதி தமிழ்நாடு வருகை- கோவை ஈஷா சிவராத்திரி விழாவில் பங்கேற்பு!
ஜனாதிபதி திரவுபதி முர்மு வரும் 18-ந் தேதி தமிழ்நாடு வருகை தருகிறார்.
சென்னை: ஜனாதிபதி திரவுபதி முர்மு வரும் 18-ந் தேதி தமிழ்நாடு வருகை தர உள்ளார். கோவை ஈஷா யோகா மையத்தின் சிவராத்திரி விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி திரவுபதி முர்மு தனி விமானத்தில் டெல்லியில் இருந்து மதுரைக்கு வருகை தர உள்ளார். மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் வழிபாடு நடத்தும் ஜனாதிபதி திரவுபதி முர்மு பின்னர் கோவை செல்கிறார்.
கோவை ஈஷா யோகா மையத்தில் நடத்தப்பட உள்ள மகா சிவராத்திரி விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் 15-வது ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்க உள்ளார்.

இதனையடுத்து மதுரை, கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2021-ம் ஆண்டு பிரதமர் மோடி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தந்திருந்தார். இருப்பினும் ஜனாதிபதி திரவுபதி முர்முவின் வருகை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications