பத்திரப்பதிவு மட்டும் போதுமா? சொத்து பத்திரங்களில் இதுவும் முக்கியம்.. அதென்ன சேர்க்கை - நிராகரிப்பு
சென்னை: சொத்துக்களை வாங்கினால் மட்டும் போதுமா? அந்த சொத்துக்களை முறையாக பத்திரப்பதிவு செய்தால் மட்டும் போதுமா? பத்திரப்பதிவு செய்தால் மட்டுமே, சொத்து உங்களுடையது என்பது ஆகிவிடாது. அப்படியானால் அதற்கு முறைப்படி என்ன செய்ய வேண்டும்? சேர்க்கை-நிராகரிப்பு என்றால் என்ன? சுருக்கமாக பார்க்கலாம்.
நிலம், வீடு என சொத்துக்களை விலை கொடுத்து வாங்கும்போது, அவை உங்களுடையதுதான் என்பதை தெரியப்படுத்தும் ஆதாரம்தான் ஆவணங்கள் எனப்படும் பத்திரங்கள்.

ஆயுள் முழுக்க இந்த பத்திரத்தை பாதுகாக்க வேண்டும். அதனால்தான், பத்திரங்களில் மூல ஆவணத்தின் விவரங்கள், தேதி, பத்திர எண், சொத்து விவரம், சொத்தின் விஸ்தீரணம், சர்வே எண்கள், உட்பிரிவு எண், கிராம எண், பெயர், போன்ற விவரங்களை சரியாக பதிவிடுவது அவசியம். அதேபோல, உரிமையாளரின் பெயர், அடையாள அட்டை, முகவரி சான்று, சொத்து விற்பவரின் பெயர், அவரது அடையாள அட்டை மற்றும் மூல ஆவணத்தில் உள்ள விவரங்கள் போன்றவற்றையும் நன்கு கவனித்து வாங்க வேண்டும்.
பத்திரப்பதிவு: பத்திரத்தின் எல்லா பக்கத்திலும் விற்ற நபரின் கையொப்பம், அவரது அடையாள அட்டை விவரங்கள், பதிவாளர் கையொப்பம், ஸ்கேன் விவரங்கள், முத்திரைத்தாள் கட்டணம் விவரம், சொத்தின் மதிப்பு சரி என்பதற்கான சான்றிதழ், ஆவணங்களுக்கு வழங்கப்பட்ட எண், ஆவணத்தின் மொத்தப் பக்கங்கள் இவைகளையும் உற்று கவனித்து வாங்க வேண்டும்.
இதற்கு பிறகே பத்திரப்பதிவு செய்ய வேண்டும். பத்திரப்பதிவு முடிந்ததுமே, நீங்கள் சொத்தை மாற்றினால் அதன் பெயர் சொத்து மாற்றம் எனப்படும். எனவே, நீங்கள் ஏதாவது சொத்து வாங்கினால், பதிவு மட்டும் செய்துவிட்டு அப்படியே விட்டுவிட்மல், சரியான நேரத்தில் சொத்து மாற்றம் செய்யப்படுவதையும் உறுதிசெய்து கொள்ள வேண்டும்.
சேர்க்கை-நிராகரிப்பு: சொத்துக்களை பதிவுசெய்த பின்னர், நியமனம் அல்லது தாக்கல் நிராகரிக்கப்பட்டால், சொத்தை வாங்குபவர் அதன் உரிமையாளராகி, சொத்து தொடர்பான அனைத்து உரிமைகளும் அவருக்கே வந்து சேர்ந்துவிடும்.. சொத்துமாற்றம் செய்யும்போது பதிவின் அடிப்படையில், அந்த சொத்தின் உரிமையின் அதிகாரப்பூர்வ பதிவில் உங்கள் பெயர் சேர்க்கப்படும். ஒருவேளை, நிராகரிக்கப்பட்டால், முந்தைய உரிமையாளரின் பெயர் உரிமைப் பதிவுகளில் இருந்து அகற்றப்பட்டது என்று பொருள்.
பத்திரப்பதிவுக்கு பிறகு, சம்பந்தப்பட்ட பதிவகத்துக்கு சென்று, உங்கள் சொத்துக்களை பதிவு செய்யப்பட்டதற்கான பத்திரத்தினை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும். பிறகு, உங்கள் பத்திரத்தின் பதிவு நம்பரை குறிப்பிட்டு, ஒரு சான்றிட்ட நகல் (Certified Copy of Sale Deed) வேண்டி மனு தந்து, அதனை 20 ரூபாய் பத்திரத்தில் சான்றிட்ட நகலாக தருவதையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.
அதுமட்டுமல்ல, ஏற்கனவே நீங்கள் கையில் வைத்திருக்கும் ஒரிஜினல் பத்திரத்துடன், இந்த நகலின் பத்திரத்தையும் ஒப்பிட்டு, அனைத்து விவரங்களும் சரியாக உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.
பத்திரங்கள் பத்திரம்: பத்திரங்களை எங்காவது அவசர தேவைக்கு கொண்டு சென்றாலும், இந்த நகலை கொண்டு சென்றால் போதும்.. ஒரிஜினல் பத்திரத்தை ஒரு பாலித்தீன் கவர் அலலது ஃபைல்களில் வைத்துவிடலாம். ஆனால், ஜெராக்ஸ், ஒரிஜினல் பத்திரத்தை தனித்தனியாக வைக்க வேண்டும். அதேபோல, ஒரிஜினல் பத்திரத்திலிருக்கும் சர்வே எண், பத்திரப்பதிவு எண் போன்ற எண்களை வேறு எங்காவது சீட்டில் எழுதி வைத்து கொள்ளலாம்.
அதுமட்டுமல்ல, பிறரிடமிருந்து வாங்கப்படும் சொத்துக்களை பதிவு செய்துவிட்டு, சரியான நேரத்தில் சொத்துக்களை மாற்றம் செய்யப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். அப்போதுதான் அந்த சொத்திற்கு நீங்கள் முழு உரிமையாளராக முடியும். இதனால், உங்கள் சொத்துக்களை யாராலும் விற்கவோ, உரிமை கொண்டாடவோ முடியாது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications