தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா? பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் முக்கிய ஆலோசனை
சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் ஆலோசனை நடத்தினார்
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மார்ச் மாதம் 2வது வாரத்தில் இருந்து மூடப்பட்டுள்ளன. ஜூன் மாதத்தில் பள்ளிகள் கொரோனா காரணமாக திறக்கப்படாத நிலையில் , புதிய கல்வியாண்டில் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்படுகிறது.
இந்நிலையில் நவம்பர் 16-ஆம் தேதி முதல் 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்தது. அத்துடன் வரும் 16ம் தேதி முதல் அனைத்துக் கல்லூரிகள், கல்வி நிலையங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்படவும் அனுமதி அளித்து உத்தரவிட்டது.

பொங்கல் பண்டிகை
இதனிடையே, நவம்பர் 16 ஆம் தேதி பள்ளிகள் திறப்பதற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட பல்வேறு தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிவிப்பில், பள்ளிகள் திறப்பில் அவசரகோலமான அறிவிப்பு ஏன்? கொரோனா குறித்த ஆராய்ச்சிகள், எச்சரிக்கைகள் கவனத்தில் எடுக்கப்பட்டனவா?
பெற்றோர்- ஆசிரியர்- மருத்துவர்களுடன் ஆலோசனைகளை முதல்வர் செய்தாரா? என கேள்வி எழுப்பினார். அத்துடன் 2021-ல் பொங்கல் பண்டிகைக்கு பிறகு அப்போதைய சூழலை ஆய்ந்துதான் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஆலோசனை
இந்நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை வருகிற 16 ஆம் தேதி பள்ளிகள் திறப்புக்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் ஆலோசனை நடத்தியுள்ளார். பள்ளிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

பள்ளிகள் திறப்பில் மாற்றம்
இதனிடையே தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு ஒரு நாளைக்கு தற்போது 2500 என்ற அளவில் பதிவாகி வருகிறது. பள்ளிகளை இப்போது மீண்டும் திறந்தால் மீண்டும் அதிகரிக்கும் அச்சமும் உள்ளது. எனவே தமிழக பள்ளிகள் திறப்பு முடிவில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாறுகிறதா தேதி?
டிசம்பர் மாதத்திற்குப் பிறகு பள்ளிகளைத் திறக்கலாம் என்று ஆலோசனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. முன்னதாக அக்டோபர் முதல் வாரத்தில் உயர் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு அறிவிப்பை வெளியிட்டு பின்னர் அந்த முடிவை தமிழக அரசு திரும்பப் பெற்றது. அதேபோன்று இப்போதும் மாற வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வி எழுகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications