தமிழகத்தில் 6,711 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - 46,308 பேர் மருத்துவமனையில் சிகிச்சை
தமிழகத்தில் மேலும் 6,711 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 9,40,145 ஆக அதிகரித்துள்ளது. 19 பேர் இன்று கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 6,711 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 9,40,145 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 2,339 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 8,80,910 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
Recommended Video
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக வீசத் தொடங்கியுள்ளது. தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவிற்கு பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் மேலும் 6,711 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 9,40,145 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 2,339 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 8,80,910 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் தற்போது 46,308 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா வேகமாக பரவுகிறது... சமூக பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள் - முதல்வர் பழனிச்சாமி
தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,927 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனையில் 11 பேரும் தனியார் மருத்துவமனையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் ஒரே நாளில் 82,982 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 2,06,03,108 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று ஒரே நாளில் 2105 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையில் 604 பேருக்கும், செங்கல்பட்டில் 611 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.