இலங்கை தாக்குதலில் தொடர்புள்ள அமைப்புக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
சென்னை: இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களை, குறிவைத்து நடத்தப்பட்ட அடுத்தடுத்த தாக்குதல்களில், 321 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இந்த குண்டுவெடிப்புக்கு, ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
இந்த தாக்குதலில் மூளையாக ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் செயல்பட்டு உள்ளபோதிலும், இலங்கையைச் சேர்ந்த தேசிய தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பை சேர்ந்த தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்தியது தெரிய வந்தது.

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் தமிழக தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் பெயரை குறிப்பிட்டு, இரு அமைப்புகளுக்கும் தொடர்பு இருப்பது போன்ற செய்திகள் பரவி வருகின்றன.
இதுகுறித்து சென்னையில் இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாநில துணை பொதுச் செயலாளர் அப்துல் ரஹீம் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது: இலங்கையைச் சேர்ந்த தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் பெயருக்கும், எங்கள் அமைப்பின் பெயருக்கும் தொடர்பு இருப்பதால் இந்த விளக்கத்தை நாங்கள் அளிக்க விரும்புகிறோம்.
குண்டு வைப்பவர்கள், கொலை செய்பவர்கள் வெளிப்படையாக செயல்பட மாட்டார்கள். அந்த வகையில்தான் இலங்கையில் உள்ள தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு தொடர்பான பெயரும் இந்த தாக்குதலுக்கு பிறகு தான் வெளி உலகத்திற்கு தெரிய வந்துள்ளது. எங்களுக்கும் அப்படித்தான் தெரியும். ஆனால், தமிழக தவ்ஹீத் ஜமாஅத் பெயரை தொடர்புபடுத்தி தவறான செய்திகள் ஊடகங்களில் வெளியாகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications