முதியோர் சமூகமாக மாறும் தமிழ்நாடு.. இளைஞர்கள் எண்ணிக்கை சரிவு.. பெரிய சிக்கல்! வெள்ளை அறிக்கை லிஸ்ட்
சென்னை: நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று தமிழக நிதி நிலை பற்றிய வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். இந்த அறிக்கையில், இந்தியாவில் முக்கிய மாநிலங்கள் அனைத்தையும் விட வேகமாக முதியோர் சமூகமாக மாறிக்கொண்டு இருப்பது தமிழ்நாடுதான் என்ற பரபரப்பு தகவலை வெளியிட்டார். 2100 ஆம் ஆண்டளவில் தமிழ்நட்டின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் முதியோர்களாக இருப்பார்கள். அதேபோல, தேசிய சராசரி சுமார் 27 சதவீதம் மட்டுமே இருக்கும் என்றும் நிதி அமைச்சர் கூறினார்.
தமிழகத்தின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:-

பாதி பேர் முதியோர்களாக இருப்பார்கள்
இந்தியாவில் முக்கிய மாநிலங்கள் அனைத்தையும் விட வேகமாக முதியோர் சமூகமாக மாறிக்கொண்டு இருப்பது தமிழ்நாடுதான். 2011 ஆம் ஆண்டு 10.6 ஆக இருந்த மக்கள் தொகை பங்கு 2031 ஆம் ஆண்டு 18.2 ஆக உயரும் என கணிக்கப்படுகிறது. மேலும் 2100 ஆம் ஆண்டளவில் தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் முதியோர்களாக இருப்பார்கள்.
அதேபோல, தேசிய சராசரி சுமார் 27 சதவீதம் மட்டுமே இருக்கும். வேலை செய்யும் வயதினரின் பங்கு ஏற்கனவே உச்ச நிலையை எட்டியுள்ளது. இனி அது குறையத்தொடங்கும். அதேசமயம் முதியோர் சார்பு விகிதம் 20.6 ல் இருந்து 32.7 ஆக உயரும். வருவாய் ஈட்டுபவர்கள் குறைவாகவும் அவர்களை சார்ந்து வாழ்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதனுடன் சுகாதார செலவுகள் ஓய்வூதிய செலவுகள் தொடர்ந்து உயரும்.
ஓய்வு பெறும் வயதை எட்டிவிட்டனர்
இரண்டு கத்திரிகோல்கள் ஒன்று நோக்கி ஒன்று மூடப்படும் நிலை. அதாவது இதை "சிசர்ஸ் எபெக்ட்" என்று சொல்வார்கள். ஒருபக்கம் வருவாய் ஈட்டுபவர்கள் குறைகிறார்கள். மற்றொரு பக்கம் செலவுகள் அதிகரிக்கின்றன. இதுவே கடன் வலையின் டெப்ட் டிரப்ட் ஆகும். இன்று தமிழ்நாடு மக்கள் தொகை அமைப்பின் வளத்தை டெமாகிராபிக் ஸ்ட்ரெந்த் இருக்கும் போதே நிதிநிலையை சீர் செய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
ஆனால் அந்த வாய்ப்பின் சாரம் ஆண்டு தோறும் சுருங்கி கொண்டே வருகிறது. தாமதம் ஆகும் ஒவ்வொரு ஆண்டும் பின்னர் செலுத்த வேண்டிய விலையை மேலும் அதிகரிக்கிறது. எளிய வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஆபத்து என்னவென்றால் செல்வந்த மாநிலமாக மாறுவதற்கு முன்னால் முதியோர் மாநிலமாக மாறிவிடுகிறது.
ஒரு குடும்பத்தின் முக்கிய வருமானம் ஈட்டும் நபர்கள் ஓய்வு பெறும் வயதை எட்டிவிட்டனர். ஆனால் அவர்களுக்கு மாற்றாக புதிய வருமானம் ஈட்டும் நபர்கள் உருவாகவில்லை என்று நினைத்து பாருங்கள். அப்படிப்பட்ட குடும்பம் தனது முதிய வயதிற்காக பாதுகாப்பாக சேமிக்க வேண்டிய நேரம் எப்போது? வருமானம் இன்னும் கிடைத்துகொண்டு இருக்கும் இப்போதுதான், வருமானம் நின்ற பிறகு அல்ல. அதேபோலவே தமிழ்நாட்டின் நிதி நிலையை சீர்செய்வதற்கான சிறந்த நேரம் இதுதான்" என்றார்.
-
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
அம்மா சென்டிமென்ட்.. அறுக்காதீங்க லாரன்ஸ்! கொந்தளித்த ப்ளூ சட்டை மாறன்! சரமாரி விமர்சனம் -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
White Paper: வரலாற்றிலேயே இதுவரை இல்லாத உச்சம்! தமிழகத்தில் தனிநபர் மீதான கடன் எவ்வளவு தெரியுமா? -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
Power cut: சென்னை உள்பட தமிழகத்தில் இரவு நேரத்தில் மின்வெட்டு ஏன்? ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் விளக்கம் -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
கள உதவியாளர் தேர்வு: இனி 'ஷூ' அணிந்து கம்பம் ஏறலாம்! மின்வாரியத்தின் புதிய விதிகள்! -
ஓமன் அருகே கப்பலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. குளிர்ந்த நீரால் உடலை பாதுகாக்க போராடும் சக ஊழியர்கள் -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்!













Click it and Unblock the Notifications