தமிழ்நாடு அரசின் தலைமை காஜி காலமானார்! தலைவர்கள் இரங்கல்
சென்னை: தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் சாகிப் (வயது 84) இன்று காலமானார். அவருடைய மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இது குறித்து விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் சாகிப் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் இஸ்லாமிய சொந்தங்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் சாகிப், தமிழ்நாட்டில் இஸ்லாமிய சமூகத்திற்கு சேவை செய்வதற்காக தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்த ஒரு இஸ்லாமிய அறிஞராவார். அரபு மொழி இலக்கியத்தில் எம்.ஏ, எம்.பில் மற்றும் பி.எச்.டி பட்டம் பெற்ற இவர், எகிப்தில் உள்ள அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் அல் இஜாசதுல் ஆலியா பட்டமும் பெற்றுள்ளார். அல் இஜாசதுல் ஆலியா என்பது இஸ்லாமிய கல்வியில் மிக உயர்ந்த பட்டங்களில் ஒன்றாகும்.
இவர், கர்நாடக நவாப்களின் அரசவையில் திவானாகப் பணியாற்றிய திவான் முகமது கவுஸ் ஷர்ஃப்-உல்-முல்க் (ரஹ்மதுல்லாஹி அலைஹ்) குடும்பத்தை சேர்ந்தவராவார். இவரது கொள்ளு தாத்தா காஜி உபைதுல்லா நக்ஷ்பந்தி (ரஹ்மதுல்லாஹி அலைஹ்), 1880ம் ஆண்டு பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தால் மெட்ராஸ் மாகாணத்தின் முதல் அரசு தலைமை காஜியாக நியமிக்கப்பட்டிருந்தார்.
தலைமை காஜி என்பவர் இஸ்லாமிய சமூகத்தில் ஒரு முக்கியப் பொறுப்பாவார். இஸ்லாமிய சட்டதிட்டங்களை (ஷரியா) செயல்படுத்துவதிலும், சமூகத்திற்கு வழிகாட்டுவதிலும் தலைமை காஜிக்கு பல கடமைகளும் பொறுப்புகளும் உள்ளன.
இஸ்லாமிய மாத பிறைகள், ரமலான் நோன்பு, ஈத் பண்டிகைகள் (பெருநாள்) போன்ற முக்கிய நிகழ்வுகளை அறிவித்து, அவற்றை இஸ்லாமிய சமூகம் எப்படி கொண்டாட வேண்டும் என்பதற்கு வழிகாட்டுதல் என சமய சடங்குகள் மற்றும் பண்டிகைகளை அறிவித்தல் இவரது பணிகளில் ஒன்றாகும். உதாரணமாக, தமிழக அரசு தலைமை காஜி, ரமலான், மீலாது நபி போன்ற பண்டிகைகள் கொண்டாடப்படும் தேதிகளை அறிவிப்பார்.
முஸ்லிம் தனிநபர் சட்டம் தொடர்பான விஷயங்களில் மக்களுக்கு ஆலோசனை வழங்குதல், திருமணம், விவாகரத்து (தலாக்), வாரிசுரிமை, வக்பு போன்ற குடும்ப மற்றும் சமூக ரீதியான விஷயங்களில் இஸ்லாமிய சட்டத்தின்படி முடிவுகளை எடுக்க வழிகாட்டுதல் என இஸ்லாமிய சட்ட ஆலோசனையை கொடுப்பதும் இவர் பணிகளில் ஒன்றாகும்
-
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம்












Click it and Unblock the Notifications