எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி?
சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள எஸ்டிபிஐ மற்றும் முக்குலத்தோர் புலிப்படை கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இரு கட்சிகளும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும், நாளை எந்த தொகுதி என்பது அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 28 நாட்கள் மட்டுமே இருக்கும் சூழலில், திமுக தலைமையிலான கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவடைந்துவிட்டது. இன்னும் எந்தெந்த தொகுதிகளில் எந்தக் கட்சி போட்டியிடுகிறது என்பது குறித்த அறிவிப்பு வெளியிடவில்லை. ஏற்கனவே சிபிஐ, சிபிஎம், விசிக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் தங்களின் விருப்ப பட்டியலை திமுகவிடம் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் சிறிய கட்சிகளான எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படை, மஜக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் மஜகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாளை எந்த தொகுதி என்பது தெரியும் என்று தமீமுன் அன்சாரி கூறினார். இதையடுத்து முக்குலத்தோர் புலிப்படை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் எஸ்டிபிஐ கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கட்சிகள் அனைத்தும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 3 கட்சிகளும் எந்த தொகுதியில் போட்டியிடுகின்றன என்ற அறிவிப்பு நாளை வெளியாகும் என்று தெரிகிறது. கருணாஸ் திருவாடனை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் தமீமுன் அன்சாரி நாகை தொகுதியிலும் போட்டியிடலாம் என்று சொல்லப்படுகிறது. இவர்கள் இருவருமே 2016ஆம் ஆண்டு அதிமுக சார்பாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர்கள். இம்முறை திமுக சார்பாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தயாராகி வருகின்றனர். ஏற்கனவே திமுக கூட்டணியில் ஐயூஎம்எல், மமக உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.
தற்போது எஸ்டிபிஐ, மஜக உள்ளிட்ட கட்சிகளும் இணைந்திருப்பதால், சிறுபான்மை மக்களின் வாக்குகளை திமுக முழுமையாக கைப்பற்ற தயாராகி வருகிறது. அதற்கேற்ப தொகுதி வாரியாக திமுகவும் பணியாற்ற தொடங்கி இருக்கிறது. இன்னொரு பக்கம் கருணாஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோர் மூலமாக முக்குலத்தோர் சமூக வாக்குகளை அறுவடை செய்யவும் தயாராகி வருகிறது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications