எடப்பாடிக்கு 93.1 பாரன்ஹீட்.. பன்னீர் செல்வத்திற்கு 98.6 பாரன்ஹீட்.. வெளியான டெஸ்ட் ரிசல்ட்
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஆகியோர் தலைமை செயலகத்தில் கொரோனா வைரஸ் காய்ச்சல் பரிசோதனை செய்து கொண்டனர்.
Recommended Video
கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கொரோனா தடுப்பு தொடர்பாக, தமிழக முதல்வர் பழனிசாமி அடிக்கடி ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகிறார். தலைமை செயலகத்தில் பூச்சிக் கொல்லி மருந்து அடிக்கடி தெளிக்கப்பட்டு வருகிறது.

தலைமைச் செயலகம்
தலைமை செயலகத்துக்கு வரும் உறுப்பினர்கள், பணியாளர்கள் ஆகியோருக்கு கொரோனா காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் கைகளை சானிடைசர் மூலம் சுத்தம் செய்த பிறகே தலைமை செயலகத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். செவிலியர்களும் அங்கே குவிக்கப்பட்டுள்ளனர்.

தெர்மல் ஸ்கேனிங்
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், கே. என். நேரு உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெர்மல் ஸ்கிரீனிங் செய்துகொண்ட பிறகே தலைமை செயலகத்துக்குள் செல்கின்றனர். சட்டசபை கூட்டத்தை ஒத்தி வைத்துவிடலாம் என்று, ஸ்டாலின் கோரிக்கைவிடுத்துள்ளார்.

டெஸ்ட்
இந்நிலையில் இன்று தலைமை செயலக 10ஆம் எண் நுழைவு வாயிலில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோருக்கு சுகாதார துறையினர் கொரோனா பரிசோதனை செய்தனர். இதில் முதல்வர் உடல் வெப்பநிலை 93.1 பாரன்ஹீட், துணை முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு 98.6 பாரன்ஹீட் என காட்டியது. தொடர்ந்து சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்து கொண்டனர்.

மாஸ்க் தயாரிப்பு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பாதிப்புடன் இருப்பவர்கள் என்95 முக கவசம் அணியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதன் விளைவாக முகக்கவசங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால், ஒரு முறை பயன்படுத்தப்படும், மாஸ்குகளை, மக்கள் வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கியிருப்பதால், முகக் கவசங்களுக்கு, தட்டுப்பாடு ஏற்படுவதால் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் மாஸ்க் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications