முதுகலை மருத்துவ கல்வி வரைவுக்கு எதிர்ப்பு.. மத்திய சுகாதார அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
சென்னை: முதுகலை மருத்துவக் கல்வி வரைவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அரசு புதிதாக முதுகலை மருத்துவ கல்வி வரைவை அறிமுகம் செய்துள்ளது. இந்த வரைவு நடைமுறைக்கு வந்தால், ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்றி முதுகலை மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்த முடியாத சூழல் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் மாநில அரசுகளின் ஒதுக்கீட்டின் கீழுள்ள முதுகலை மருத்துவ சேர்க்கையில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்,

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மாநில அரசுகளின் ஒதுக்கீட்டின் கீழுள்ள முதுகலை மருத்துவ சேர்க்கையில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டுமென்றும் வலியுறுத்தியும். தேசிய மருத்துவ ஆணையத்தின் முதுகலை மருத்துவக் கல்வி வரைவுக்குத் தமிழ்நாடு அரசின் எதிர்ப்பைத் தெரிவித்தும், மாண்புமிகு ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications