ராஜினாமா செய்யக்கூடாதுன்னு சொன்னது ஓகே.. ஆனா எப்படி கட்சி விவகாரத்த விமர்சிக்கலாம்? தமிழக காங்கிரஸ்!
Recommended Video
சென்னை: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பதவி விலகக்கூடாது என நடிகர் ரஜினிகாந்த் கூறியது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் காங்கிரஸ் உட்கட்சி விவகாரம் குறித்து ரஜினி விமர்சித்தது தவறு என தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி கூறியுள்ளார்.
நாட்டின் 17வது மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது. காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி பதவியேற்ற பிறகு காங்கிரஸ் சந்திக்கும் இரண்டாவது பெரி தோல்வி இது.
இதற்கு ராகுலின் தலைமையே காரணம் என பேச்சு எழுந்தது. கட்சியின் வடமாநில நிர்வாகிகளும் இந்த விமர்சனத்தை முன்வைத்ததாக தெரிகிறது.

ராகுல் ராஜினாமா
இதனால் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் காரியக் கமிட்டி கூட்டத்தில் ராஜினாமா கடிதம் அளித்தார் ராகுல்காந்தி. ஆனால் அதனை ஏற்க காங்கிரஸ் காரியக் கமிட்டி மறுத்துவிட்டது.

ரஜினியிடம் கேள்வி
ஆனால் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகியே தீருவேன் என பிடிவாதமாக உள்ளார் ராகுல்காந்தி. இந்நிலையில் சென்னை போயஸ்கார்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிக்காந்திடம் ராகுலின் பதவி விலகல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

ராகுல் நிரூபிக்க வேண்டும்
அதற்கு பதிலளித்த ரஜினி, ராகுல் நிச்சயமாக பதவி விலகக்கூடாது. ஜனநாயகத்தில் ஆளுங்கட்சியை போல் எதிர்க்கட்சியும் முக்கியமானது. ராகுலுக்கு தலைமைப் பண்பு இல்லை என்பதை ஏற்கமுடியாது. கட்சியில் உள்ள மூத்த தலைவர்களை கையாள்வது ராகுலுக்கு சவாலாக உள்ளது என்ற கூறிய ரஜினி, ராகுல் நின்று நிரூபித்துக்காட்ட வேண்டும் என்றார்.

காங்கிரஸ் மகிழ்ச்சி
இந்நிலையில் ரஜினியின் பேச்சுக்கு தமிழக காங்கிரஸ் வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி, ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகக்கூடாது என்று கூறியது மகிழ்ச்சியளிக்கிறது.

உற்று நோக்கப்படுகிறது
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெற்ற வெற்றி, மோடி என்கிற தனிமனித தலைமைக்கு கிடைத்த வெற்றி என்று கூறியதை ஏற்க முடியாது. மேலும் காங்கிரஸ் உட்கட்சி விவகாரம் குறித்து ரஜினிகாந்த் விமர்சிப்பது தவறு. இவ்வாறு தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்தார். அரசியலுக்கு வருவது உறுதி என ரஜினி அறிவித்துள்ள நிலையில் அவரது ஒவ்வொரு பிரஸ்மீட்டும் பேச்சும் பெரிதும் உற்று நோக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications