சென்னையில் 2 வாரத்திற்கு முழு லாக்டவுன் அவசியம்.. தமிழக அரசு அமல்படுத்துமா?.. என்ன செய்யணும்?
சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக பரவி வரும் நிலையில் 2 வாரங்களுக்கு முழு லாக்டவுன் அறிவிக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் கோரி வருகிறார்கள்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மார்ச் 23-ஆம் தேதி முதல் அமலில் உள்ள லாக்டவுனில் 5ஆவது கட்டம் அமல்படுத்தப்பட்ட போது தமிழக அரசு சில தளர்வுகளை அளித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 36,841 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 1,927 பேருக்கு தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதில் சென்னையில் மட்டும் 1,390 பேராகும். இதுவரை சென்னையில் 25,937 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை
தமிழகத்தில் கடந்த 31-ஆம் தேதி முதல் நேற்றைய தினம் வரை சுமார் 11 நாட்களுக்கு தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1000-த்தை தாண்டியுள்ளது. தமிழக பாதிப்பில் சென்னையில்தான் 70 சதவீத பாதிப்பு உள்ளது. இது சென்னைவாசிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா எண்ணிக்கை
மேலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பேருந்து இயக்கம், கடைகள் திறப்பு உள்ளிட்ட தளர்வுகளை தமிழக அரசு அறிவித்ததை மருத்துவ நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் ஆதரிக்கவில்லை. மாறாக இது கொரோனா எண்ணிக்கையை அதிகரிக்கவே உதவும் என்றார்கள்.

கோரிக்கை
லாக்டவுன் போட்ட போதே கொரோனா தொற்று அதிகமாகியுள்ளது, தற்போது தளர்வை ஏற்படுத்துவதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என சமூகவலைதளங்களில் ஆலோசனைகள் வந்தன. இந்த நிலையில் மேலும் இரு வாரங்களுக்கு சென்னையில் மட்டுமாவது முழு ஊரடங்கு அதாவது 144 தடையுத்தரவை அரசு அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

ஆலோசனைகள்
அதிலும் முழு லாக்டவுன் என்பது அவசரமாகவும் அவசியமாகவும் அமல்படுத்தியே ஆக வேண்டும். அப்போதுதான் கொரோனா பரவலை கொஞ்சமாவது கட்டுப்படுத்த முடியும். அதுபோல் 15 நாட்கள் கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டு அந்த காலகட்டத்தில் கொரோனா சோதனைகளை அதிகரிக்க வேண்டும். இதுதான் நோய் பரவலை கட்டுப்படுத்தும் என்பதை அரசு மறந்துவிட கூடாது என்கிறார்கள் நிபுணர்கள். இந்த ஆலோசனைகளை மாநில அரசு பரிசீலனை செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications