பொன் மாணிக்கவேலுவுக்கு பதவி நீட்டிப்பு இல்லை?.. சிலை கடத்தல் ஆவணங்களை ஒப்படைக்க தமிழக அரசு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிலை கடத்தல் வழக்கின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன் மாணிக்கவேலின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைவதால் அது தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்குமாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஐஜியாக இருந்த பொன் மாணிக்கவேல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30-இல் ஓய்வு பெற்றார். இவரது பணிக்காலத்தில் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெரும்பாலான சிலைகளை மீட்டெடுத்தார்.

Tamilnadu government orders Pon Manickavel to hand over statue smuggling related documents

இதனால் ஓய்வுக்கு பிறகும் அன்றைய தினமே இவரை ஓராண்டு சிறப்பு அதிகாரியாக சென்னை உயர்நீதிமன்றம் நியமித்தது. கடந்த 7 ஆண்டுகளில் இவர் 1,145 சிலைகளை மீட்டெடுத்துள்ளார்.

அது போல் சர்வதேச சிலை கடத்தல்காரர் சுபாஷ் சந்திர கபூரை கைது செய்தார். சிலை மோசடி தொடர்பாக இந்து அறநிலையத் துறை அதிகாரிகளையும் அவர் கைது செய்தார். இந்த நிலையில் பொன் மாணிக்கவேலின் பணிக்காலத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

நேரில் சந்தித்த பொன்னார்.. அழைப்பு விடுத்த எஸ்.வி சேகர்.. ராதாரவியை பாஜக இழுத்தது எப்படி?

தனக்கு பணி நீட்டிப்பு வேண்டும் என கோரி உச்சநீதிமன்றத்தில் பொன் மாணிக்கவேல் சார்பில் வழக்கறிஞர் பணி மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணை வரும் டிசம்பர் 6-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பொன் மாணிக்கவேலின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதனால் சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+