இறைச்சி ,மீன் கடைகளை சனிக்கிழமை மூட தமிழக அரசு உத்தரவு..!
Subscribe to Oneindia Tamil
சென்னை: இறைச்சி, மீன் கடைகளை சனிக்கிழமை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் மே 1 -ஆம் தேதி சனிக்கிழமை அன்றும் இறைச்சி கடைகளுக்கு அனுமதி இல்லை. அது போல் மீன் மார்க்கெட்களும் திறக்க அனுமதி இல்லை.

தடையை மீறி இறைச்சிக் கடையை திறந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கிற்கு உத்தரவிட்டதால் அன்றைய தினம் இறைச்சிக் கடைகளுக்கு அனுமதி இல்லை.
இந்த முறை சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை இறைச்சிக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இறைச்சி பிரியர்கள் வருத்தமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications