ரெடியா இருங்க! இன்று வீக் எண்ட்! சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்! எந்த ரூட் தெரியுமா
சென்னை: வார இறுதி நாளையொட்டி தலைநகர் சென்னையில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப இன்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களில் இருந்தும் பொதுமக்கள் தலைநகர் சென்னைக்கு வந்துள்ளனர். படிப்பு, வேலை உள்ளிட்ட பல காரணங்களுக்காகப் பொதுமக்கள் சென்னை வருகிறார்கள்.

பொதுவாக விடுமுறை விடும்போது சென்னையில் இருக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். இதனால் வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் பொதுவாக மக்கள் சொந்த ஊருக்குத் திரும்புவார்கள்.
அந்த நாட்களில் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும். இதுபோன்ற நேரங்களில் தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். அதன்படி வார இறுதி நாளான இன்று சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 150 சிறப்புப் பேருந்துகளைத் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் இயக்குகிறது
வார இறுதி நாளான சனிக்கிழமை சென்னையிலிருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், திருவண்ணாமலை, போளூர், வேலூர், காஞ்சிபுரம் மற்றும் திருப்பதி ஆகிய ஊர்களுக்குப் பொதுமக்கள் அதிகளவில் பயணம் செய்வார்கள் என்பதால் இந்த ரூட்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
பயணிகள் வசதிக்காகத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் சார்பில் கூடுதலாக 150 சிறப்புப் பேருந்துகள் சனிக்கிழமை இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் எண்ணிக்கை குறையும் வரை தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications