தமிழ்நாட்டில் 13 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.! முக்கிய துறைகளில் அதிகாரிகள் நியமனம்
சென்னை: தமிழ்நாட்டில் இப்போது மொத்தம் 13 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராகச் சமீபத்தில் தான் ஷிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டார். அதற்கு முன்பு தலைமைச் செயலாளராக பணியாற்றி வந்த இறையன்பு கடந்த மாதம் ஓய்வு பெற்ற நிலையில், ஷிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து நிர்வாக வசதிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இப்போது மொத்தம் 13 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி சிறப்புத் திட்ட அமலாக்கத்துறை செயலாளராக தாரேஸ் அகமது நியமிக்கப்பட்டுள்ளார். நில சீர்திருத்தத் துறை ஆணையராக வெங்கடாச்சலமும், பொதுத்துறை கூடுதல் செயலாளராக அதிகாரி சிவஞானம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல நீர்வளத்துறைக் கூடுதல் செயலாளராக மலர் விழி, மதுவிலக்கு துறை சிறப்புச் செயலாளராகச் சுகந்தி நியமிக்கப்பட்டுள்ளார். பொதுத்துறை கூடுதல் செயலாளராக அதிகாரி சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், வருவாய் நிர்வாக ஆணையராகக் கலையரசன், நீர்வளத்துறைக் கூடுதல் செயலாளராக மலர்விழி ஆகியோரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications