"புரேவி" புயல் தமிழகத்தை எப்போது தொடும்.. இந்த 10 மாவட்டங்களில் உஷார்நிலை.. முழுவீச்சில் தென்தமிழகம்
புரேவி புயலால் தென் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
சென்னை: புரேவி புயல், இப்போதைக்கு பாம்பனுக்கு 530 கிமீ தொலைவில் புயல் நிலைகொண்டுள்ளது.. இன்னும் 6 மணி நேரத்தில் வலுப்பெற உள்ளது... முன்னதாக, புரேவி புயலின் பெருமழையில் இருந்து தற்காத்துக்கொள்ள தென் தமிழகம் முழு வீச்சில் தயாராகி வருகிறது.
பாம்பனுக்கு 530 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ள புரேவி புயல் இன்று மாலை அல்லது இரவு திருகோணமலையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பின் நாளை அதாவது டிசம்பர் 3-ம்தேதி காலை மன்னார் வளைகுடாவிற்கு வரும். பின்னர் டிசம்பர் 4 அன்று அதிகாலையில் கன்னியாகுமரி, பாம்பன் இடையே கரையை கடந்து தமிழகத்திற்குள் நுழைய இருக்கிறது.

10 மாவட்டங்கள்
இதனால், 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்,, சிவகங்கை, விருதுநகர், நாகப்பட்டினர், கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும் அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மீட்பு குழுவினர்
இதனிடையே, புரேவி புயல், பெருமழை ஆகியவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள தென் தமிழகம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 40 பேர் வந்திருக்கிறார்கள்.. இவர்கள் தூத்துக்குடி கடற்கரை பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

தாமிரபரணி
அதேபோல, திருநெல்வேலி மாவட்டத்துக்கு 60 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வந்துள்ளனர்.. இவர்களில் ஒரு பிரிவினர் தாமிரபரணி ஆற்றங்கரைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டர்.. மற்றொரு பிரிவினர் கூட்டப்புளிக்கு சென்றுள்ளனர். பொதுமக்கள் யாரும் தாமிரபரணி ஆற்றுக்கு சென்று குளிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே பேரிடர் மீபு குழுவினர் முகாமிட்டுள்ளனர்.. மொத்தம் 11 குழுக்களாக பிரிந்து மாவட்டத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.. பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிக்கு தேவையான கருவிகளை தயார்படுத்தினர்.. தனுஷ்கோடி, ராமேஸ்வரன், பாம்பன், சாயல்குடி போன்ற கடலோர பகுதிகளுக்கு சென்றுள்ளனர்.

கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டத்திலும் பேரிடர் மீபு குழுவினர் வந்துள்ளனர்.. மாவட்ட மக்களுக்கு ஸ்பீக்கர் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.. அதேபோல் தூத்துக்குடியிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. கடலுக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று சொன்னதால் மீனவர்கள் யாரும் செல்லவில்லை
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications