வெளிநாட்டு முஸ்லிம்கள் மீதான கைது நடவடிக்கை... கண்டிக்கத்தக்கது... இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பு
சென்னை: தமிழகத்திற்கு ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெளிநாட்டு முஸ்லிம்களைக் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
முறையாக விசா பெற்று மத்திய அரசு அனுமதியோடு இந்தியா வந்தவர்களை கள்ளத்தோணியில் வந்தவர்களை போல் தமிழக அரசு நடத்தக்கூடாது என அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

மதப்பிரச்சாரம் அல்ல
உலகளாவிய இயக்கமான தப்லீக் ஜமாத் என்பது அமைதி வழியில் தங்களைத் தாங்களே பண்படுத்திக்கொள்வதற்காக உலகம் முழுவதும் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டு இறைவழிபாடுகளை தங்களுக்குள்ளே நடத்திக்கொண்டு வரும் ஒரு ஆன்மீக பேரியக்கமாகும். இவர்கள் பிற மதத்தவர்களுக்கு மதப்பிரச்சாரம் செய்யும் அமைப்பல்ல தங்களுக்குள்ளேயே ஒழுக்கம், தூய்மை, நேர்மை ,இறையச்சம் போன்றவற்றை வளர்த்துக் கொள்வதற்காக நெடுந்தூரம் பயணித்து நேர்மையோடு வாழக்கூடியவர்கள்.

வேதனை தருகிறது
வாழ்நாளில் யாருக்கும் எதற்கும் உள்ளத்தால் தீங்கிழைக்கக் கூடாது என்ற லட்சியத்தைச் சுமந்து சொந்த காசில் இறை தியானத்திற்காக ஊரு விட்டு ஊர் நாடு விட்டு நாடு என ஆன்மீக பயணம் மேற்கொள்வார்கள். இவர்களால் உலகம் முழுவதும் எந்த விதமான சர்ச்சையோ, பதட்டமோ இதுவரை எங்கும் ஏற்பட்டதாக ஒரே ஒரு நிகழ்வுகூட இல்லை. இப்படிப்பட்ட ஒரு ஒழுக்கம் சார்ந்த ஆன்மீகவாதிகளைத் தேவையில்லாமல் சர்சைக்குள்ளாக்குவதும் சங்கடப்படுத்துவதும் வேதனை அளிக்கிறது.

என்ன நியாயம்?
முறையாக விசா பெற்று தமிழகத்திற்கு ஆன்மீக சுற்றுலா வந்த வெளிநாட்டு முஸ்லிம் ஆண் மற்றும் பெண் பயணிகளான அவர்களை ஏதோ கள்ளத்தோணியில் வந்தவர்களைப் போலவும் தீவிரவாதிகளைப் போலவும் தமிழக அரசு நடத்துவது கண்டனத்திற்குரியதாகும்
முறையான அனுமதியோடு உரிய ஆவணங்களோடு வந்து அரசுக்குத் தெரிந்த நிலையில் தங்கி இருந்தவர்களை எல்லாம் பதுங்கி இருந்தவர்கள் என்று குறிப்பிட்டு சுற்றுலா விசாவில் வந்து மதப்பிரச்சாரம் செய்ததாக கூறி அவதூறாகக் கைது செய்திருப்பது எந்தவகையில் நியாயம்?

மனிதநேயமற்ற செயல்
அவர்கள் எங்குப் போய் எவரிடம் மதப்பிரச்சாரம் செய்தார்கள்? பள்ளிவாசல்களில் தங்கி முஸ்லிம்களிடம் பேசுவது எப்படி மதப்பிரச்சாரமாகும்? இதே போல் ஆன்மீக சுற்றுப்பயணமாக தமிழகத்திற்கு வருகை புரிந்த பிற மதத்தவர்களை கைது செய்து தமிழக அரசு சிறையில் அடைத்துள்ளதா? முறையான அனுமதி பெற்று வெளிநாட்டு முஸ்லிம் ஆன்மீக சுற்றுலாப் பயணிகளை முறையற்ற வகையில் கைது செய்வதும் சிறையிலடைப்பதும் தேவையற்ற செயலாகும். ஆதாரமற்ற அவதூறு குற்றச்சாட்டின் பேரில் அவர்களைக் கைது செய்து சிறையிலடைத்துள்ளது மனித நேயமற்ற செயலாகும். இந்த நடவடிக்கை மூலம் மத்திய பாஜக அரசின் முஸ்லிம் விரோத மனப்பான்மையைத் தமிழக அரசும் கையிலெடுத்துள்ளதோ என்ற ஐயம் ஏற்படுகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications