இப்படியே போனால்.. வட இந்தியாவை விட மோசமாகி விடும்.. தமிழகத்திற்கு முழு லாக்டவுன் தேவை?
சென்னை: தமிழகத்தில் அதுவும் சென்னையில் கொரோனா பரவல் சுனாமி போல் பரவுவதாக சொல்லப்படும் நிலையில் தமிழகத்திற்கு முழு லாக்டவுன் போடப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.
தமிழகத்தில் முதல் அலையில் இல்லாத அளவுக்கு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை, தாய்மார்கள் முதல் இளைஞர்கள் வரை கொரோனாவின் இரண்டாவது அலையில் சிக்கி தவித்து வருகிறார்கள்.
ஒரு நாளைக்கு 16 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படுகிறார்கள். நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் கொரோனாவால் இறந்தோரின் எண்ணிக்கை 100-ஐ நெருங்கியது. அதாவது 98 பேர் மரணமடைந்தார்கள்.

விழிப்புணர்வு
பெரும்பாலானவர்கள் அரசு சொல்லும் வழிமுறைகளை பின்பற்றுவதே இல்லை. ஒரு மாஸ்கை கூட போலீஸ்காரர்கள் அபராதம் விதிப்பார்களே, பேருந்தில் ஏற்றமாட்டார்களே என்ற எண்ணத்தில்தான் போடுகிறார்களே தவிர கொரோனா நம்மிடம் இருந்து மற்றவர்களுக்கோ, மற்றவர்களிடமிருந்து நமக்கோ பரவக் கூடாது என்ற விழிப்புணர்வு துளிக் கூட இல்லை என்றே பரவலாக பேசப்படுகிறது.

சமூக ஆர்வலர்கள்
இதனால் தமிழகத்தில் ஒரு லாக்டவுன் நிச்சயம் வேண்டும் என்கிறார்கள். முழுசாக தமிழகத்தை இழுத்து பூட்டாவிட்டாலும் குறைந்தபட்சம் கொரோனா அதிகம் பாதித்துள்ள நகரங்களிலாவது முழு முடக்கம் வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.

ஸ்டாலின்
இந்த லாக்டவுன் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு அமலாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போதைய சூழலில் அதிமுக அரசே ஆட்சியை தக்க வைத்துக் கொண்டால் லாக்டவுன் போடுவார்கள் என்றே தெரிகிறது. ஒரு வேளை திமுக ஆட்சிக்கு வந்தால் லாக்டவுன் போடுவது கடினம்தான். ஏனெனில் திமுகவின் முதல்வர் வேட்பாளரான ஸ்டாலின், இன்னொரு லாக்டவுனை தமிழகம் தாங்கும் நிலையில் இல்லை என தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சி
இதனால் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்திற்கு முழு ஊரடங்கு போடப்படாது என்றே தெரிகிறது. மாறாக கொரோனா அதிகம் பாதித்த நகரங்களிலாவது லாக்டவுன் போடப்படும் என தெரிகிறது. லாக்டவுனும் தடுப்பூசியுமே கொரோனாவை அழிக்கும் மிகப் பெரிய சக்திகள்.

எந்தெந்த இடங்கள்
ஒரு வேளை தமிழகத்தில் லாக்டவுன் அமல்படுத்த அரசு முடிவு செய்தால் சென்னை, மதுரை, நெல்லை, கோவை, தூத்துக்குடி, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய இடங்களுக்கு முழு லாக்டவுன் போடப்படலாம் என தெரிகிறது. 5 பேரில் ஒருவருக்கு ஆக்ஸிஜன் தேவைப்படும் நிலைதான் தமிழகத்தில் உள்ளது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications