அடுத்த 4, 5 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும்.. சென்னையில் மழை எப்போது?.. வெதர்மேனின் முக்கிய தகவல்!
சென்னை: அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு குளிரான இரவுகளே வடதமிழக உள்மாவட்டங்களில் இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை கடந்த நவம்பர் மாதம் போதும் போதும் என சொல்லும் அளவுக்கு கொட்டித் தீர்த்துவிட்டது. இதனால் நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன.
இந்த டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை இருக்கும். மார்கழி மாதம் என்றாலும் நெருக்கமாக வீடுகள் இருக்கும் பகுதிகளிலும் கடுங்குளிர் நிலவி வருகிறது.

குளிர் வாட்டி எடுக்கிறது
வீட்டில் ஃபேன் கூட ஓட விட முடியாமல் குளிர் வாட்டி வதைக்கிறது. இதனால் சளி, தொண்டை வலி, இருமல் உள்ளிட்ட பிரச்சினைகளால் மக்கள் அவதியடைகிறார்கள். இந்த குளிருக்கு கோடைக் காலமே தேவலை என்று சொல்லும் அளவுக்கு மோசமான குளிர் இருக்கிறது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பனிப்பொழிவு உள்ளது.

குளிர்
வாகனங்கள், பூக்கள், கொடி, மரங்கள் மீது பனிக்கட்டிகள் படர்ந்துள்ளன. ஏற்கெனவே குளிரால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பனிக் கட்டியால் கடுங்குளிர் நிலவி வருகிறது. இந்த நிலையில் கடுங்குளிர் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு வட உள்மாவட்டங்களில் குளிர் இரவுகள் தொடரும்.

19 முதல் 21 டிகிரி
சென்னை மற்றும் தமிழக கடலோரத்தில் டிசம்ப்ர் 31, ஜனவரி 1 அல்லது 2 தேதிகளில் மழை பெய்யும். சென்னையில் அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு குறைந்தபட்ச வெப்பநிலையில் 19 முதல் 21 ஆக இருக்கும். கிழக்கு காற்று வீசும். மேக கூட்டங்களும் அதிகரிக்கும். இதனால் இரவு நேரத்தில் குளிர் அதிகமாகும். வளி மண்டலத்தில் இருந்து வெப்பம் வெளியேறவிடாமல் மேகங்கள் மறைத்துக் கொள்ளும் என்றார்.

நெட்டிசன்கள்
வேலூரில் கடுங்குளிர் நிலவுகிறது என நெட்டிசன்கள் தெரிவித்துள்ளார்கள். கோடைக்காலமோ மழை காலமோ வேலூரில் எல்லாமே அதிகம்தான் என்கிறார்கள். ஓசூரிலும் அதிக பனி மூட்டம் இருப்பதாக கூறுகிறார்கள். தருமபுரி, நாமக்கல்லில் அதிகாலையில் கடும் பனிமூட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications