32 மாவட்டங்களும் ஊட்டி ஆனது... கடுங்குளிரில் நடுங்கும் தமிழகம்.. பொங்கல் வரை தொடருமாம்!
Recommended Video

சென்னை: தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. இந்த பனிப்பொழிவு வரும் பொங்கல் வரை நிலவும் என தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விவசாயிகள், மக்களை ஏமாற்றி விட்டு இந்த முறையும் வழக்கம் போல் பொய்த்துவிட்டது. இதனால் மக்கள் மனவேதனையில் உள்ளனர்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பெரும்பாலான ஏரிகள் வறண்ட நிலையில் காணப்படுவதால் வரும் கோடையை எப்படி சமாளிப்பது என்ற கவலை இப்போதே தொற்றிக் கொண்டு விட்டது. டிசம்பர் முடிய மழை இருக்கும் என வானிலை அறிவிப்புகள் வந்த போதிலும் அதுவும் பொய்த்துவிட்டது.

கடும் அவதி
இந்த நிலையில் தமிழகத்தில் கடுங்குளிர் வாட்டி வதைக்கிறது. மாலை 4 மணி முதல் குளிர் காற்று வீசத் தொடங்குகிறது. இந்த நிலை மறுநாள் நண்பகல் 12 வரையும் தொடர்கிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

பனித்துளிகள்
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றைய தினம் கடுங்குளிர் நிலவியது. இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ள பதிவில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடர்ந்த பனி, கடுங்குளிரான காலை பொழுது, அதிக பனித்துளிகள் காணப்பட்டன.

செல்சியஸ் பதிவு
அதுபோல் தமிழகத்தின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் வழக்கத்தை விட குறைவான அளவிலேயே வெப்பநிலை காணப்பட்டது. இந்த கடுங்குளிர் பொங்கல் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையின் பூந்தமல்லியில் வெப்பநிலை 16.2 டிகிரி செல்சியஸ் பதிவானது.

இயல்பை விட குறைவு
தமிழகத்தில் ஓசுர், கிருஷ்ணகிரி, திருத்தணி, திருவள்ளூர், விரிஞ்சிபுரம், வேலூர், பையூர், தருமபுரி, அந்தியூர், ஈரோடு, கோவை, பேச்சிப்பாறை, திருமங்கலம், மதுரை, பவானி, பாண்டிச்சேரி, சூலூர் ஆகிய பகுதிகளில் வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாகவே உள்ளது.
குறைந்த வெப்பநிலை
சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளான பூந்தமல்லி, மாதவரம், காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம், செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், மீனம்பாக்கம், எண்ணூர், சோளிங்கநல்லூர், கேளம்பாக்கம் ஆகிய பகுதிகளில் 19 டிகிரி செல்சியஸை விட குறைவான வெப்பநிலையே பதிவாகியுள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications