நீட் தேர்வு... இந்த ஆண்டு தமிழகத்தில் நல்ல ரிசல்ட் கிடைக்கும்!
சென்னை: நீட் தேர்வில் இந்த ஆண்டு தமிழகம் நல்ல ரிசல்ட்டை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் 2019-20-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நேற்று நடைபெற்றது. தேசிய தேர்வு முகமை நீட் தேர்வை நடத்தி வருகிறது.
நாடு முழுவதும் 15.19 லட்சம் மாணவர்கள் நீட் நுழைவுத்தேர்வை எழுதினர். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட 11 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

நீட் தேர்வு
தமிழகத்தில் ஒரு லட்சத்து 34 ஆயிரம் மாணவ மாணவிகள் தேர்வு எழுத பதிவு செய்திருந்தனர். அவர்களில் 88% பேர் தேர்வு எழுதினார்கள். நேற்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய தேர்வு நேற்று மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.

வினாத்தாள் எளிமை
இந்நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வில் தமிழகத்தில் இருந்து அதிகளவு மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.ஏனெனில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு நீட் தேர்வுக்கான வினாத்தாள் எளிமையாக இருந்ததாக வல்லுநர்களும் மாணவ, மாணவிகளும தெரிவித்தனர்.

பெரும்பாலான கேள்விகள்
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி செயலாளர் டாக்டர் பிரசாத் மன்னி நீட் தேர்வு வினாத்தாளில் பெரும்பாலான கேள்விகள் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி புத்தகத்திலிருந்து கேட்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இதுகுறித்து முன்கூட்டிய விழிப்புணர்வு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இயற்பியல் மட்டுமே
இதனிடையே தேர்வு எழுதிய மாணவ மாணவிகளும் எதிர்பார்த்ததை போன்று நீட் தேர்வு அவ்வளவு கடினமாக இல்லை என்று தெரிவித்தனர். மேலும் மூன்று பாடங்களில், உயிரியல் எளிதாக இருந்தது, வேதியியல் மிதமாக இருந்தது மற்றும் இயற்பியல் மட்டுமே சற்று கடினமாக இருந்தது என்றும் மாணவ மாணவிகள் தெரிவித்தனர்.

நல்ல ரிசல்ட்
வினாத்தாள் எளிமையாக இருந்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்துள்ள நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வில் அதிகளவு மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நீட் தேர்வில் கடந்த ஆண்டு தமிழகம் 34% தேர்ச்சியை மட்டுமே கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications