நீட் தேர்வு... இந்த ஆண்டு தமிழகத்தில் நல்ல ரிசல்ட் கிடைக்கும்!
சென்னை: நீட் தேர்வில் இந்த ஆண்டு தமிழகம் நல்ல ரிசல்ட்டை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் 2019-20-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நேற்று நடைபெற்றது. தேசிய தேர்வு முகமை நீட் தேர்வை நடத்தி வருகிறது.
நாடு முழுவதும் 15.19 லட்சம் மாணவர்கள் நீட் நுழைவுத்தேர்வை எழுதினர். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட 11 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

நீட் தேர்வு
தமிழகத்தில் ஒரு லட்சத்து 34 ஆயிரம் மாணவ மாணவிகள் தேர்வு எழுத பதிவு செய்திருந்தனர். அவர்களில் 88% பேர் தேர்வு எழுதினார்கள். நேற்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய தேர்வு நேற்று மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.

வினாத்தாள் எளிமை
இந்நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வில் தமிழகத்தில் இருந்து அதிகளவு மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.ஏனெனில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு நீட் தேர்வுக்கான வினாத்தாள் எளிமையாக இருந்ததாக வல்லுநர்களும் மாணவ, மாணவிகளும தெரிவித்தனர்.

பெரும்பாலான கேள்விகள்
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி செயலாளர் டாக்டர் பிரசாத் மன்னி நீட் தேர்வு வினாத்தாளில் பெரும்பாலான கேள்விகள் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி புத்தகத்திலிருந்து கேட்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இதுகுறித்து முன்கூட்டிய விழிப்புணர்வு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இயற்பியல் மட்டுமே
இதனிடையே தேர்வு எழுதிய மாணவ மாணவிகளும் எதிர்பார்த்ததை போன்று நீட் தேர்வு அவ்வளவு கடினமாக இல்லை என்று தெரிவித்தனர். மேலும் மூன்று பாடங்களில், உயிரியல் எளிதாக இருந்தது, வேதியியல் மிதமாக இருந்தது மற்றும் இயற்பியல் மட்டுமே சற்று கடினமாக இருந்தது என்றும் மாணவ மாணவிகள் தெரிவித்தனர்.

நல்ல ரிசல்ட்
வினாத்தாள் எளிமையாக இருந்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்துள்ள நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வில் அதிகளவு மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நீட் தேர்வில் கடந்த ஆண்டு தமிழகம் 34% தேர்ச்சியை மட்டுமே கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications