ஒருவருக்கு எவ்வளவு மது.. டாஸ்மாக் கடையை திறக்கும் ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய 12 நடைமுறைகள்
சென்னை: இன்று முதல் தமிழகத்தில் மதுக்கடைகள் மீணடும் திறக்கப்படுகின்றன.இந்நிலையில் கடையை திறக்கும் பணியாளர்கள் பின்பற்ற வேண்டியவை குறித்து டாஸ்மாக் நிர்வாகம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அவற்றை இப்போது பார்ப்போம்.
Recommended Video
மதுக்கடைகளை திறக்க உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால் இன்று காலை 10 மணிக்கு மீண்டும் டாஸ்மாக் மதுக்கடைகள் தமிழகத்தில் திறக்கப்பட உள்ளன.
தமிழகத்தல் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்படாது, அதேபோல் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளிலும் மதுக்கடைகள் திறக்கப்படாது. இந்நிலையில் மதுக்கடைளை திறக்கப்போகும் ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றை இப்போது பார்ப்போம்

500 டோக்கன்
- 08.5.2020 அன்று திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள் மட்டுமே 16.5.2020 அன்று திறக்கப்பட வேண்டும். பிற கடைகள் மாவட்ட மேலாளர்கள் உத்தரவு பெற்ற பின்னரே திறக்க வேண்டும்.
- கடை மேற்பார்வையாளர்கள் கடையில் போதிய இருப்பு உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். சரக்கு இருப்பு தேவைப்படும் கடைகள் கிடங்கை தொடர்பு கொள்ள வேண்டும்,.
- ஒரு மணி நேரத்திற்கு 70 டோக்கன்கள் (டோக்கனில் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது) மற்றும் நாள் ஒன்றுக்கு 500 டோக்கன் மட்டுமே வழங்க வேண்டும்.

ஒரு புல் அல்லது 4 குவாட்டர்
- ஒரு நபருக்கு ஆதார் அடையாளம் பெற்று 750 மிலி ஒரு பாட்டில் அல்லது 375 மிலி இரண்டு பாட்டில் அல்லது 180 மிலி 4 பாட்டில்கள் அல்லது 650 மிலி பீர் இரு பாட்டில்கள் மட்டுமே வழங்க வேண்டும். மொத்த விற்பனை செய்யும் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
- பேரிகார்டு மறறும் ஒலிப்பெருக்கி அவசியம் பொருத்தப்பட வேண்டும்.
- பணியாளர் அனைவரும் கையுறை, முககவசம், சேனிடைசர் ஆகியவை உபயோகிக்க வேண்டும்.

வயது வாரியாக டோக்கன்
- சுமார் 20 பில் நகல்களை தினசரி அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.
- அரசு கூறியுள்ள வயது முறையில் டோக்கன் வழங்குதல் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
- இன்று (16.05.2020) மட்டுமே கதவு வெல்டிங் திறப்பு செய்ய வேண்டும்

எஸ்எம்ஸ்ஸி விபரம்
விற்பனை விபரத்தை மாலை 7 மணிக்குள் வழக்கமான முறையில் எஸ்எம்எஸில் தெரிவிக்க வேண்டும். மேலும் இவ்விபரத்தை (பணியாளர் ) இளநிலை உதவியாளருக்கு தொலைப்பேசியில் தகவல் தெரிவிக்க வேண்டும்.
தவறுகள் மேற்கொள்ளும் கடை பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும்.
அனைத்து பணியாளர்களும் கடை பணியில் இருக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications