டாஸ்மாக் குபீர்.. மதுபானம் விலை ஏறுது.. குவார்ட்டருக்கு எவ்ளோ உயர்வு பாருங்க.. குடிமகன் தலையில் இடி
சென்னை: டாஸ்மாக் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. விரைவில் மதுபான பொருட்களின் விலைகளும் உயரப்போகிறதாம். இதைக்கேட்டு குடிமகன்கள் அதிர்ந்து போயுள்ளனர்.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடை மூலம் அரசுக்கு வருடத்துக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் வந்து கொண்டிருப்தபால், டாஸ்மாக் மதுக்கடைகள் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.

டாஸ்மாக் போராட்டம்: பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகள், பள்ளிக்கூடங்கள் அருகேயும் டாஸ்மாக் மதுக்கடைகள் இன்னும் இயங்கி வருகிறது. இதனால் ஆங்காங்கே பொதுமக்கள் போராட்டத்தையும் முன்னெடுக்கிறார்கள்.
மற்றொருபக்கம், 500 மதுக்கடைகளை ஏற்கனவே குறைக்கப்பட்ட நிலையில், 4829 மதுக்கடைகள் இப்போது செயல்பட்டு செயல்படுகிறது. இதனால், மூடப்பட்ட 500 மதுக்கடைகளால், நஷ்டம் வந்துள்ளால், இதை ஈடுகட்டுவதற்கான நடவடிக்கையை அரசு யோசித்து வருகிறது. சமீபத்தில் உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்திலும் இதுகுறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போது, மதுபாட்டில்கள் விலையை கணிசமாக உயர்த்துவது என்று முடிவெடுக்கப்பட்டதாம்.
பெரிய சுமை: அதாவது குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் உயர்த்தினால் மக்களுக்கு பெரிய சுமையாக தெரியாது என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது... மேலும், பிராண்டுக்கு ஏற்ப 80 ரூபாய் வரை விலையை உயர்த்தினால் அரசுக்கு கணிசமான தொகை கிடைக்கும் என்றும் ஆலோசனைகள் தரப்பட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் சொல்லும்போது, பிராந்தி, விஸ்கி, ரம், ஜின் உள்ளிட்ட மது வகைகளின் விலையை குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் உயர்த்த ஆலோசிக்கப்பட்டது... ஆப் பாட்டில் (375 மி.லி.) ரூ.20 வரையும் முழு பாட்டில் ரூ.30 முதல் ரூ.50-வரை உயர்த்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டது. பிராண்டுகள் அடிப்படையில் ரூ.80 வரை விலை உயர வாய்ப்புள்ளது.
அதிரடி முடிவு: இதே போல் பீர் பாட்டில் விலையையும் ரூ.10 முதல் ரூ.50 வரை விலை உயர்த்த ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு கொள்கை முடிவு எடுத்து விரைவில் அறிவிப்பு வெளியிடும். அப்போது சரக்கு விலைகள் குறித்து தெரிவிப்போம்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், சட்டசபையில், அமைச்சர் முத்துசாமி தாக்கல் செய்த சட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது: "மாநிலத்தின் வருவாயை பெருக்கும் நோக்கில், மதுபானங்களின் மீது ஆயத்தீர்வை விதிக்கப்படுகிறது. இந்த தீர்வையானது சாதாரண மது வகைகளை பொறுத்தவரை, 'புரூப்' லிட்டர் ஒன்றுக்கு, 250லிருந்து, 500 ரூபாயாகவும், நடுத்தர வகைக்கு லிட்டருக்கு லிட்டருக்கு, 500லிருந்து, 1,000 ரூபாயாகவும் உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்சொன்ன முடிவிற்கு செயல்வடிவம் கொடுக்க, 1937 மது விலக்கு சட்டத்தின் உட்பிரிவை திருத்தம் செய்ய அரசு தீர்மானித்துள்ளது. இந்த சட்ட முன் வடிவானது, மேற்குறிப்பிட்ட முடிவுக்கு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலப்பொருட்கள்: ஏற்கனவே, மூலப்பொருட்கள் விலை உயர்வால், மதுபானங்களின் விலையை உயர்த்தி தருமாறு, மதுபான நிறுவனங்கள் அரசை வலியுறுத்தி வரும்நிலையில், ஆயத்தீர்வை உயர்வும் தற்போது அமலுக்கும் வரஉள்ளது.. இதனால், செலவு அதிகமாகும் என்பதுடன், மதுபானங்களின் விலை பாட்டிலுக்கு, 5 முதல், 40 ரூபாய் வரை விரைவில் உயர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications