சென்னையில் ஜெகஜோராய் 5 மாதங்களுக்குப் பின் டாஸ்மாக் மதுபான கடைகள் திறப்பு!
சென்னை: கொரோனாவால் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்ட சென்னையில் இன்று காலை 10 மணி முதல் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மதுபானங்களை சமூக இடைவெளியுடன் வாங்க வசதியாக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
தமிழகத்தில் சென்னை மாவட்டத்தில்தான் கொரோனா பாதிப்பு மிக அதிகம். சென்னையைப் பொறுத்தவரையில் சராசரியாக ஒருநாளைக்கு 1,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வந்தது.
இந்த பாதிப்பு திடீரென குறையவும் தொடங்கியது. சென்னை நகரில் நோய்கட்டுப்பாட்டு பகுதிகள் எண்ணிக்கையும் கணிசமாக குறைக்கப்பட்டுவிட்டன. சென்னையை தவிர பிற மாவட்டங்களில்தான் தற்போது கொரோனா பாதிப்பு விஸ்வரூபமெடுத்து வருகிறது.

சென்னை மதுகடைகள் திறப்பு
மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் கொரோனா பாதிப்பு கோர தாண்டவமாடினாலும் மதுபான கடைகள் திறந்தே இருக்கின்றன. அத்துடன் சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களில் டாஸ்மாக் மதுபான விற்பனை படுஜோராகவும் இருக்கிறது. இதனையடுத்தே சென்னையிலும் டாஸ்மாக் மதுபான கடைகளைத் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

குடிமகன்களுக்கான ஏற்பாடுகள்
டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு வரும் குடிமகன்களை ஒழுங்குபடுத்தும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. சாமியானா பந்தல்கள் அமைக்கப்பட்டன. சமூக இடைவெளியுடன் குடிமகன்கள் நிற்க வேண்டும் என்பதற்காக்க இடைவெளி வளையங்கள், தடுப்புகள் போடப்பட்டிருக்கின்றன. பல இடங்களில் குடிமகன்களுக்கு அறிவுறுத்தல் விடுக்க மைக்செட்டுகளும் கட்டப்பட்டன.

மதுகடைகள் திறக்கப்பட்டன
மேலும் டாஸ்மாக் மதுபான கடைகளில் கூட்டத்தை ஒழுங்குபடுத்த போலீசாரும் நிறுத்தப்பட்டனர். காலையில் 9 மணி முதலே டாஸ்மாக் கடைகளுக்கு குடிமகன்கள் வரத் தொடங்கினர். குடிமகன்களுக்கு முதலில் டோக்கன்கள் வழங்கப்பட்டன. பின்னர் 10 மணிக்கு பூஜை பரிவாரங்களுடன் கடைகள் திறக்கப்பட்டன.

மதுகடைகள் திறக்க எதிர்ப்பு
சென்னை மாவட்டத்தில் 5 மாதங்களுக்குப் பின்னர் இன்றுதான் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்டன. இந்த மதுபான கடைகளை இப்போது திறப்பதற்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் ஏற்கனவே கடும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி












Click it and Unblock the Notifications