டாஸ்மாக் விடுமுறை.. திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நாளை மதுக்கடை,பார்களுக்கும் அரசு லீவு அறிவிப்பு
சென்னை: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நாளை அதாவது ஜனவரி 15, தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை, சுமார் 4829 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவைகளிலிருந்து ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் வருடம் முழுவதும் அரசுக்கு கிடைத்து வருகிறது. அதற்கேற்றவாறு, தினமும் 150 கோடி ரூபாய்க்கும், விடுமுறை தினங்களில் அதிகமாகவும் மதுபானங்கள் விற்பனையாகின்றன.

சிறப்பு நாட்கள்: அதிலும் சிறப்பு நாட்களில் டாஸ்மாக் வருமானம் இரட்டிப்பாக பெருகிவிடும்.. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் டாஸ்மாக் வருமானம் 3 மடங்காக பெருகிவிடுகிறது.. இப்படித்தான் கடந்த தீபாவளிக்கும் 600 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய டாஸ்மாக் நிர்வாகத்துக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாக தகவல்கள் பரபரத்து, அதற்கு எதிர்க்கட்சிகளும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்திருந்தன.
இந்நிலையில் தற்போது பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளியை போலவே பொங்கல் பண்டிகைகளிலும் என்றாலே டாஸ்மாக்குகள் களை கட்டும். அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் விற்பனை அமோகமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காந்தி ஜெயந்தி: ஏற்கனவே தமிழக அரசு சார்பாக ஆண்டுக்கு 9 நாட்கள் மட்டும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, காந்தி ஜெயந்தி, குடியரசு தின விழா, மிலாது நபி, திருவள்ளூவர் தினம் உள்ளிட்ட 9 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை திருவள்ளுவர் தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: "ஜனவரி 15ம் தேதி (புதன்கிழமை) அன்று திருவள்ளுவர் தினத்தையொட்டி தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) ஆகியவைகளின் கீழ் உள்ள அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை: மேலும் FL2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், FL3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் FL3(A), FL3(AA) மற்றும் FL11 உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications