கொரோனாவை விட அதி உச்சமாக இருக்கிறதே... தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.258 கோடிக்கு மது விற்பனை
சென்னை: தமிழகத்தில் ஞாயிறு லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட நிலையில் நேற்று ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் ரூ258 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் நாளை அதிகாலை 4 மணி முதல் அமலுக்கு வருகின்றன. அத்துடன் 7 மாதங்களுக்கு பிறகு இன்று ஞாயிற்றுக்கிழமை முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.

மது கடைகளில் கூட்டம்
புதிய கட்டுப்பாடுகளின் கீழ் மதுபான கூடங்கள்- பார்கள் அனைத்தும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று டாஸ்மாக் மதுபான கடைகளில் கூட்டம் அலைமோதியது.

ரூ258 கோடி விற்பனை
லாக்டவுன் அமல்படுத்தப்படக் கூடும் என்கிற தகவல் மற்றும் ஞாயிற்றுக்கிழமை கடைகள் மூடப்படும் என்பதால் நேற்றே கடைகளில் அலைமோதினர் குடிமகன்கள். இதனால் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் ரூ258 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகின.

சென்னைக்கு முதலிடம்
இதில் சென்னை மண்டலம் தான் அதிக அளவில் மதுபானங்களை விற்பனை செய்துள்ளது. சென்னை மண்டலத்தில் ரூ58 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. இதில் 2-வது இடம் மதுரை மண்டலம். மதுரை மண்டலத்தில் ரூ49 கோடிக்கு மதுபானங்கள் நேற்று விற்பனை செய்யப்பட்டுள்ளன.

டாஸ்மாக் கடைகளை மூடுங்க..
திருச்சியில் ரூ.48 கோடி, சேலத்தில் ரூ.47 கோடி, கோவையில் ரூ.48 கோடி என நேற்று மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த டாஸ்மாக் மதுபான கடைகளை மூடவேண்டும் என்பது தமிழக மக்களின் எதிர்பார்ப்பாகும்.












Click it and Unblock the Notifications