தமிழகத்தில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.. தேர்தல் ஆணையம் உத்தரவு!
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி காலை 10 மணி முதல் ஏப்ரல் 23 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் மூடப்படுகின்றன.
வரும் 23 ஆம் தேதி, தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதையொட்டி தமிழ்நாட்டில் ரூ.50,000-க்கு மேல் ரொக்கமாக பணம் எடுத்துச் செல்லக்கூடாது என்பதுபோல பல்வேறு கட்டுப்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.

அந்தவகையில், தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் எந்தெந்த தேதிகளில் மூடப்பட உள்ளன என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சட்டமன்ற தேர்தலையொட்டி வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி காலை 10 மணி முதல் ஏப்ரல் 23 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் மூடப்படுகின்றன.
இதை மீறி கள்ளத்தனமாக மது விற்பனை செய்வது கண்டறிந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேர்தலையொட்டி அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications