அரசு பள்ளியில் படித்துவிட்டு பிஇ சேரும் மாணவர்களுக்கு தொழில்நுட்ப கல்வி கமிஷனர் மேஜர் அறிவிப்பு
சென்னை: பொறியியல் கல்லூரிகளில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் எச்சரித்துள்ளது. அரசு பள்ளிகளில் படித்து 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களின் கல்விக்காக ஆகும் செலவீனங்களான படிப்பு கட்டணம், விடுதி கட்டணம் அல்லது போக்குவரத்து கட்டணம் என அனைத்து கட்டணங்களையும் அரசே ஏற்றுள்ளதால் இந்த உத்தரவு பிறப்பிக்கட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் சேர வேண்டும் என்றால் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும். ஏனெனில் அண்ணா பல்கலைக்கழகங்களின் கீழ்தான் அனைத்து பொறியியல் கல்லூரிகளும் இயங்கி வருகிறது. தற்போது 2024-25-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தீவிரமாக நடந்து வருகிறது.

மாணவர்களுக்கு இந்த கலந்தாய்வு மூலம் விரும்பும் கல்லூரிகள் மதிப்பெண் அடிப்படையில் தரப்படுகிறது. தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் படித்து 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களின் கல்விக்காக ஆகும் செலவீனங்களான படிப்பு கட்டணம், விடுதி கட்டணம் அல்லது போக்குவரத்து கட்டணம் என அனைத்து கட்டணங்களையும் மாநில அரசே ஏற்றுள்ளது.
அதேபோல், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்லூரிகள், தனியார் பொறியியல் கல்லூரிகளில் கலந்தாய்வு மூலம் சேர்க்கை ஆணை பெறும் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு அரசு சார்பில் கல்வி கட்டண சலுகையும் வழங்கப்படுகிறது. இதுதவிர ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கும் கட்டண சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பொறியியல் படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை ஆணை பெற்ற மாணவர்கள் மற்றும் முதல் பட்டதாரி மாணவர்கள் உள்பட அரசின் சலுகைகள் பெறும் மாணவர்களிடம் அனைத்து கட்டணங்களையும் செலுத்த சில பொறியயல் கல்லூரிகள் வற்புறுத்துவதாக தொழில்நுட்ப கல்வி கமிஷனருக்கு புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில், தொழில்நுட்ப கல்வி கமிஷனர் ஆபிரகாம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், தமிழக அரசின் உத்தரவுகளை மீறி, சில பொறியியல் கல்லூரிகள் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள் உள்பட அரசின் கட்டண சலுகை பெறும் மாணவர்களிடம், அனைத்து கட்டணங்களையும் செலுத்த வற்புறுத்துவதாக புகார்கள் வந்துள்ளது. எனவே அரசின் கல்வி கட்டண சலுகை பெறும் மாணவர்களிடம் பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் கட்டணங்களை வசூலிக்க கூடாது என கண்டிப்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இதை மீறும் பொறியியல் கல்லூரிகளின் நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications