சென்னை உள்பட நான்கு மாவட்டத்தினர் சேலம் வருவதற்கு இ பாஸ் வழங்குவது தற்காலிமாக நிறுத்தம்
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் அந்த மாவட்டங்களில் இருந்து சேலம் வருவதற்கு இ பாஸ் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது
Recommended Video
திருமணம், அவசர மருத்துவம், நெருங்கிய உறவினர் மரணம், வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் சிக்கி தவிப்போருக்கு சாலை, ரயில் மற்றும் விமானம் மூலம் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு நுழைவதற்கும், தமிழகத்திற்குள் வெவ்வெறு மாவட்டங்களுக்கு செல்வதற்கும் இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் சென்னையில் இருந்து , தனி நபராகவும், குழுவாகவும் சாலை மார்க்கமாக செல்ல தினமும் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பிக்கிறார்கள் ஆனால் சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் இ பாஸ் வழங்க மற்ற மாவட்ட நிர்வாகங்கள் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.
சென்னையிலிருந்து சொந்த ஊர் போக திட்டமா.. இ பாஸ் கூட கிடைச்சிடுச்சா? அந்த எண்ணத்தையே மறந்துவிடுங்கள்
இதனிடையே இ-பாஸ் கொடுக்கப்பட்டால் செல்வோரின் செல்போன் நம்பர், கார் நம்பர், வீட்டுமுகவரி பதிவு செய்யப்படுதால் அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றால் அவர்களை சுகாதாரத்துறையினர் கண்டறிந்து பரிசோதனை செய்கிறார்கள்.. இதில், கொரோனா தொற்று இருந்தால் அவர்களுக்கு சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்கிறார்கள். தொற்று இல்லை என்றாலும் 14 நாட்கள் அவரை வீட்டில் இருந்தப்படியே தனிமைப்படுத்திக் கொள்ள உத்தரவிட்டுள்ளார்கள்.
இந்நிலையில் கடந்த சில நாளாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து முறையாக செல்வதற்கு பல்வேறு மாவட்டத்தினர் ஏராளமானோர் விண்ணப்பிக்கும நிலையில் பாஸ் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனிடையே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் அந்த மாவட்டங்களில் இருந்து சேலம் வருவதற்கு இ பாஸ் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மரணம் மற்றும் மருத்துவ அவரச நிலைக்கு மட்டுமே தரப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.