வாடகை வீட்டில்.. பழுதுபார்ப்பு செலவு யாருடைய பொறுப்பு? தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம்!
சென்னை: வாடகை வீட்டில் இருக்கும்போது, வீட்டின் பழுதுபார்ப்பு செலவுகளை நைஸாக குடியிருப்போர் தலையில் ஹவுஸ் ஓனர்கள் கட்டிவிடுவது உண்டு. ஆனால், எல்லா செலவையும் குடியிருப்பவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை என்று சட்டம் சொல்கிறது. அப்படியெனில் எந்த செலவுகள் யாருடையது? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
பொதுவாக, ஒரு வாடகை ஒப்பந்தத்தில் பழுதுபார்ப்பு குறித்த விதிகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். இருப்பினும், சட்டம் யார் யாருக்கு என்ன பொறுப்பு என்பதை வரையறை செய்திருக்கிறது.

வீட்டு உரிமையாளரின் பொறுப்புகள்
வீட்டின் கட்டமைப்பைச் சார்ந்த பெரிய பழுதுகளுக்கு உரிமையாளரே பொறுப்பேற்க வேண்டும்.
- சுவர்களில் ஏற்படும் விரிசல்கள் மற்றும் கட்டுமானக் குறைபாடுகள்.
- வீட்டின் வெளிப்புறத்தில் வர்ணம் பூசுதல்.
- மின்சார வயரிங் (Wiring) தொடர்பான பெரிய பிரச்சனைகள்.
- தண்ணீர் தொட்டி மற்றும் பிரதான குழாய் அமைப்புகளில் ஏற்படும் கசிவுகள்.
- கதவு மற்றும் ஜன்னல் நிலைகளில் ஏற்படும் பாதிப்புகள்.
வாடகைக்கு இருப்போரின் பொறுப்புகள்
அன்றாடப் பயன்பாட்டினால் ஏற்படும் தேய்மானங்கள் மற்றும் சிறிய பழுதுகளை வாடகையாளர் கவனிக்க வேண்டும்.
- மின்சார சுவிட்சுகள் மற்றும் சாக்கெட்டுகள் மாற்றுவது.
- பல்புகள் மற்றும் டியூப் லைட்கள் மாற்றுவது.
- குழாய் வாஷர்கள் (Tap washers) மற்றும் சிறிய கசிவுகளைச் சரிசெய்தல்.
- கழிவறை மற்றும் சமையலறைச் சாதனங்களின் சிறிய பராமரிப்பு.
- வாடகையாளர் கவனக்குறைவால் ஏற்படும் சேதங்கள்.
வாடகை சட்டம் கூறுவது என்ன?
இந்திய அரசின் மாதிரி வாடகை சட்டத்தின்படி, பழுதுபார்ப்புச் செலவுகளை இரு தரப்பினரும் சுமூகமாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். அதாவது, அவசியமான ஒரு பழுதுபார்ப்பை உரிமையாளர் செய்ய மறுக்கும் பட்சத்தில், வாடகையாளர் அதைச் செய்துவிட்டு, அந்தச் செலவை மாத வாடகையில் கழித்துக்கொள்ள சட்டத்தில் இடமுண்டு. ஆனால், இதற்கு முன்னதாக உரிமையாளருக்கு முறையான அறிவிப்பு (Notice) வழங்கப்பட வேண்டும்.
வாடகையாளர் ஒரு சேதத்தை ஏற்படுத்திவிட்டு அதைச் சரிசெய்ய மறுத்தால், உரிமையாளர் அந்தத் தொகையை வாடகையாளர் வழங்கிய முன்பணத்தில் இருந்து கழித்துக்கொள்ளலாம்.
பிரச்சனையை தவிர்க்க
வாடகைக்கு போகும் போதே, எந்தெந்த பழுதுகளுக்கு யார் பொறுப்பு என்பதை ஒப்பந்தத்தில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். வீட்டிற்குள் குடியேறும் முன்பே மின்சாரம் மற்றும் பிளம்பிங் வசதிகள் சரியாக உள்ளதா என்பதைச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். குடியேறும்போது வீட்டில் ஏதேனும் பாதிப்புகள் இருந்தால், அதை புகைப்படம் எடுத்து உரிமையாளரிடம் தெரிவிப்பது பின்னாளில் எழும் சிக்கல்களைத் தவிர்க்கும். எந்தவொரு பழுது ஏற்பட்டாலும், அதை உடனடியாக உரிமையாளரின் கவனத்திற்குக் கொண்டு செல்வது நல்லது.
-
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய்.. எந்த வகையிலும் நியாயமற்ற அணுகுமுறை.. ஏன்? -
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
அடி வெளுக்கப்போகும் கனமழை! 7 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. உஷார் மக்களே! -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங்












Click it and Unblock the Notifications