கமலை விமர்சித்தது முதல் கார் கண்ணாடியை உடைத்தது வரை.. தாடி பாலாஜி மனைவி நித்யாவின் சர்ச்சைகள்
கமல்ஹாசன் தொடங்கி தற்போது எதிர் வீட்டு கார் கண்ணாடி உடைப்பு வரை தாடி பாலாஜி மனைவி நித்யாவின் சர்ச்சைகள் ஏராளம்.
சென்னை: நடிகர் கமல்ஹாசன் மிகவும் மோசமான கேரக்டர் என்றும் என் வாயை கிளறாதீர்கள் என்றும் தாடி பாலாஜி மனைவி நித்யா கூறியிருந்தது முதல் தற்போது எதிர் வீட்டின் கார் கண்ணாடியை உடைத்தது வரை சர்ச்சைகள் ஏராளம்.
காமெடி நடிகரான தாடி பாலாஜி நித்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 15 வயதில் போஷிகா என்ற மகள் இருந்து வருகிறார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.
இந்த நிலையில் நித்யாவுக்கும் தாடி பாலாஜிக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது. இது நாளடைவில் இருவரிடையே பெரும் விரிசலை தந்தது. நித்யா போலீஸ்காரர் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தாடி பாலாஜி பல ஆண்டுகளுக்கு முன்பு அப்பட்டமாக கூறியிருந்தார்.

குடும்பச் சண்டை
இப்படி குடும்ப சண்டை நீண்டு கொண்டிருக்கையில் இவர்களை சேர்த்து வைக்க நண்பர்கள் பலர் முயற்சி செய்து வருகிறார்கள். இதனால் சமாதானம் ஆகும் இவர்கள் மீண்டும் சண்டையிட்டு கொள்கிறார்கள். மகள் போஷிகா தாயுடன் இருந்து வருகிறார். பாலாஜி தனியே வசித்து வருகிறார்.

பிக்பாஸ் சீசன் 2
இந்த நிலையில்தான் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் தம்பதி இருவரும் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு வந்ததே இவர்களை சேர்த்து வைக்கத்தான் என சொல்லப்பட்டது. இந்த நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தாடி பாலாஜி, மகள் போஷிகா குறித்து கண் கலங்க வைக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.

நித்யா பதிலடி
இதற்கு நித்யா பதிலடி கொடுத்திருந்தார். இந்த நிலையில்தான் நித்யாவிடம் இருந்து தனது மகளை மீட்டுத் தர வேண்டும் என குழந்தைகள் உரிமை ஆணையத்தில் தாடி பாலாஜி புகார் கொடுத்துள்ளார். அதில் நித்யாவின் பராமரிப்பில் இருக்கும் மகளை அவர் சரியாக பள்ளிக்கு அனுப்புவதில்லை என புகார் எழுந்துள்ளது. வயதுக்கு வந்த மகளை சமூகவலைதளங்களில் ஆட விடுகிறார். இந்த வீடியோவின் கீழ் வரும் கமென்ட்டுகளை ஒரு தகப்பனாக தன்னால் படிக்க முடியவில்லை என தாடி பாலாஜி தெரிவித்திருந்தார். இதனால் மகளை தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிடும்படி கேட்டிருந்தார்.

யூடியூப் சேனல்
இந்த நிலையில் ஒரு யூடியூப் சேனலுக்கு கடந்த ஆண்டு நித்யா பேட்டி கொடுத்த போது, பிக்பாஸ் கமல் அறிவுறுத்தல் குறித்து கேட்டிருந்தார்கள். அதற்கு நித்யா, யாரு அவரா (கமல்ஹாசனா), என் வாயை கிளறாதீங்க. கமல் குறித்து என்னிடம் நிறைய கன்டென்ட் இருக்கிறது. அவரை போன்றதொரு வொர்ஸ்ட் கேரக்டரை நான் என் வாழ்வில் பார்த்ததே இல்லை என பகீர் தகவலை தெரிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. இதையடுத்து தனது யூடியூபில் மகளுடன் லைவில் வந்திருந்தார். அப்போது மகளே தனது அப்பா மீது வெறுப்புணர்வில்தான் இருக்கிறார் என்பதை காட்டினார்.

சர்ச்சைக்கு மேல் சர்ச்சை
இப்படி சர்ச்சைகளுக்கு மேல் சர்ச்சையில் சிக்கிய நித்யா, தற்போது மீண்டுமொரு பிரச்சினையில் சிக்கியுள்ளார். மாதவரம் சாஸ்திரி நகர் பகுதியில் மகளுடன் நித்யா வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு எதிரே ஓய்வு பெற்ற ஆசிரியர் மணி என்பவர் வசித்து வருகிறார். அடிக்கடி நித்யாவுக்கும் மணிக்கும் இடையே தகராறு ஏற்படுவது வழக்கம். அதனால் மணியை பழிவாங்க நினைத்து நடுராத்திரியில் யாரும் இல்லாத நேரத்தில் மணி வீட்டின் மாடியில் கல் எறிந்துள்ளார். அந்த கல் மணி மீது பட்டு பின்னர் வீட்டிலிருந்த கார் மீதும் பட்டு கண்ணாடி உடைந்துவிட்டது. இதையடுத்து வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது நித்யாதான் கல்லை வீசியுள்ளார் என தெரியவந்தது. இதையடுத்து மாதவரம் போலீஸில் ஓய்வுபெற்ற ஆசிரியர் மணி புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் நித்யாவை கைது செய்த போலீஸார் அவரை எச்சரித்து ஜாமீனில் வெளியே விட்டனர்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications