Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கலைஞரின் "பாசப்பறவைகள்"! ஈன்றபொழுதில் பெரிதுவக்கும்! தங்கத்தை நினைத்து தமிழச்சியின் "பேசும் படம்"

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது சகோதரர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையை அவருடைய சகோதரியும் திமுக எம்பியுமான தமிழச்சி தங்கபாண்டியன் பாராட்டியுள்ளார்.

தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையை நேற்றைய தினம் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார். இவர் நிதித் துறை அமைச்சராக தாக்கல் செய்யும் முதல் முழு பட்ஜெட் இதுவாகும்.

 Thamilachi Thangapandiyan praises Thangam Thennarasu for his budget preparation

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவர் தாக்கல் செய்தது துணை நிலை பட்ஜெட்டாகும். நேற்று அவர் தாக்கல் செய்த முழு பட்ஜெட்டை முதல்வர் ஸ்டாலினே பாராட்டியிருந்தார்.

அவர் கூறியிருப்பதாவது: கனிவான பொருளாதார சமநிலை அறிக்கையை தயாரித்துள்ளார் தங்கம் தென்னரசு. தமிழக அரசுக்கு மட்டுமல்ல, தமிழகத்தின் எதிர்காலத்திற்கும் மாபெரும் கடமையை மிகச் சரியாக ஆற்றியுள்ளார். நனவாகப் போகும் கனவுகள் என ஸ்டாலின் பாராட்டியிருந்தார். தங்கம் தென்னரசு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நம்பிக்கைக்குரியவராக இருந்தார்.

அவருடைய குட் வில் புக்கில் இடம்பெற்றிருந்தார். அதே நிலையே முதல்வர் ஸ்டாலினுடனும் அவர் தொடர்ந்து வருகிறார். இந்த நிலையில் நேற்றைய தினம் சிறப்பான வகையில் பட்ஜெட்டை தாக்கல் செய்ததாக பூரித்து போயுள்ளார் தங்கம் தென்னரசுவின் சகோதரி தமிழச்சி தங்கபாண்டியன். இதையடுத்து தங்கத்தை நேரில் சந்தித்து அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அப்போது தனது தாயின் புகைப்படத்தின் அருகே இருவரும் நின்றிருக்கிறார்கள். தமிழச்சி தனது வாழ்த்து பதிவில் ஈன்றபொழுதில் பெரிதுவக்கும்... என தொடங்கும் திருக்குறளை மேற்கோள்காட்டியுள்ளார்.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்

இந்த குறள் 69ஆவது குறளாகும். அதாவது தனது மகனைச் சான்றாளன் நல்ல குணமுடையவன் என பலரும் போற்றுவதைக் கேள்விப்பட்ட தாய், அவனைப் பெற்ற காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள் என்பதுதான் இந்த குறளின் பொருளாகும். அந்த புகைப்படத்தை பார்த்தாலே தெரிகிறது, தமிழச்சியின் தாய் புகைப்படத்தின் அருகே இருவரும் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

தமிழச்சி தங்கபாண்டியன் ஒரு கவிஞர், சமூக ஆர்வலர். இவர் திமுக சார்பில் தென் சென்னை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்பியாக உள்ளார். இவரது தந்தை தங்கப்பாண்டியன் முன்னாள் அமைச்சராவார். இவரது தாய் ராஜாமணி அம்மாள். இவரது சகோதரர் தற்போதைய அமைச்சராக உள்ள தங்கம் தென்னரசு.

இந்த நிலையில் உடல்நலக் குறைவால் ராஜாமணி கடந்த 2020 ஆம் ஆண்டு காலமாகிவிட்டார். தமிழச்சி தங்கபாண்டியனும் தங்கம் தென்னரசுவும் ஆண்டுதோறும் தனது தாய் தந்தையரின் நினைவு நாள் அன்று உருக்கமான கவிதைகளை சமூகவலைதளங்களில் பதிவிடுவர். அந்த வகையில் இன்று தாய் இல்லாவிட்டாலும் தாய் ஸ்தானத்தில் இருந்து தமிழச்சி தங்கபாண்டியன் பெருமைப்படுகிறார் என்பதாகவே அந்த புகைப்படம் உள்ளது. ஒரு ஆண் மகனுக்கு ஒரு கட்டத்தில் மனைவியும் உடன் பிறந்தவர்களும் தாய் ஸ்தானம்தானே.

இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் பாராட்டி நெகிழ்ந்துள்ளனர். அதிலும் தாய் சிரிப்பதை போன்றே தமிழச்சியும் சிரித்தபடியே நின்றிருப்பது உண்மையில் அவர் தனது சகோதரரை நினைத்து எத்தனை பெருமையடைந்திருப்பார் என்பது நன்றாகவே தெரிகிறது என்கிறார்கள். இன்னும் சிலர் இப்படியே இருவரும் ஒற்றுமையுடன் பணிச் சிறக்க வாழ்த்துகள் என்கிறார்கள். அம்மாவின் ஆசியுடன் இருவரும் நலம் பெறுக என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+