அடுத்த தலைமுறைக்கு கல்வியை கொடுத்துவரும் முதல்வருக்கு நன்றி.. நடிகர் விஜய் சேதுபதி நெகிழ்ச்சி
சென்னை: கல்லூரி மாணவர்களுக்கு 10 லட்சம் லேப்டாப் வழங்கும் உலகம் உங்கள் கையில் என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இந்த விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகர் விஜய்சேதுபதி, இந்த விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் வழங்கும் விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மாணவர்களுக்கு கல்வியை வழங்க பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

ஒருவருக்கு கல்வி கிடைப்பதன் மூலம் அந்த குடும்பம் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து செல்கிறது. கல்வியை கொடுத்து மாணவர்களை முன்னேற்ற அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒருவருக்கு அவருடைய வளர்ச்சி என்பது அவருக்கு கிடைக்கும் அறிவு மூலமாகத்தான் ஒருவர் முன்னேறி போகிறார்.
எவ்வளவு தடைகள் வந்தாலும் அதை எல்லாம் உடைத்தெறிந்து அவரை முன்னாடி நகர்த்தி கொண்டு செல்வதில் பெரும் பங்கு வகிக்கிறார்கள். அதற்கு உங்களுக்கு (முதல்வர்) ரொம்ப நன்றிசார். திட்டத்தில் பலன் அடைய போகும் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.












Click it and Unblock the Notifications