திமுக அரசின் ”அம்மன் மாநாடு”-முதலில் கோவில்களில் ஜாதிபாகுபாடு ஒழியனுமே- பெரியாரிஸ்டுகள் கொந்தளிப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு முருகன் மாநாடு போல அம்மன் மாநாட்டை நடத்த இருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு நடத்தி முடித்த முருகன் மாநாட்டை கடுமையாக எதிர்த்துக் கொண்டிருக்கும் பெரியாரிஸ்டுகள், கோவில்களில் ஜாதிபாகுபாடுகளை ஒழிக்க முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
தமிழ்நாடு அரசின் இந்துசமய அறநிலையத்துறை பழநியில் 2 நாட்கள் முருகன் மாநாட்டை நடத்தியது. இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் 'இந்துத்துவா' கோட்பாட்டை பிரசாரம் செய்வதாக இருக்கிறது என கூறி திமுக கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையானது விரைவில் அம்மன் மாநாடு நடத்த நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் சேகர்பாபு கூறியிருக்கிறார். இது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. தமிழ்நாடு அரசின் அம்மன் மாநாடு அறிவிப்புக்கு எடுத்த எடுப்பிலேயே பெரியாரிஸ்டுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக திராவிடர் தளம்- காட்டாறு குழு நிர்வாகிய பெரியாரிஸ்ட் அதி அசுரன் தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: இந்து அறநிலையத்துறை, அம்மன் கோவில்களில் விளக்கு பூஜைகளை அறிமுகப்படுத்தியதாம்! அந்த வழியில் அம்மன் மாநாடுகள் நடத்த முயற்சி எடுக்கப்படுமாம்! அம்மன் மாநாடுகளை நடத்துவதற்கு முன்பாக - தலித் மக்களை நுழையவே விடாத அம்மன் கோவில்களில் தலித் மக்கள் வழிபடுவதற்குரிய உரிமையைப் பெற்றுத் தர முடியுமா?
அமைச்சர் சேகர்பாபு அவர்களுக்கு அவரது துறை சார்ந்த ஒரு தகவல்.
வாய்ப்பிருந்தால் கீழே கூறப்பட்டுள்ள கோவில்களிலுள்ள ஜாதிவெறியைத் தடுக்க முயற்சி செய்யுங்கள். அதைவிட்டுவிட்டு விளக்குபூஜை, மாநாடு போன்ற பா.ஜ.க. வேலைகளை திராவிட அரசின் சார்பில் செய்யாதீர்கள் :
எமது ஆய்வில் 85 பஞ்சாயத்துகளில் 'வழிபாட்டுத் தலங்களில் பாகுபாடுகள்' கடைப்பிடிக்கப் படுகின்றன என்ற கண்டறியப் பட்டுள்ளது.
85 பஞ்சாயத்துகளில் எமது குழுவினர் ஆய்வு செய்ததில்,
1. 69 கோவில்களில் தலித்துகள் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளனர்
2. 72 கோவில்களில் சன்னி தானம் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது
3. 56 கோவில்களில் அர்ச்சனை செய்ய அனுமதி இல்லை
4. தலித் குடியிருப்பு பகுதிக்குள் தேர் விடாத கோவில்களின் எண்ணிக்கை 54.
5. வழிபாட்டு நேரங்களில் 56 கோவில்களில் பாகுபாடு டைபிடிக்கப்படுகின்றன
6. 52 கோவில்களில் தலித்துகளுக்கு பரிவட்டம் கட்டப்படுவதில்லை
7. 33 கோவில்களில் தலித்துகளுக்கு வடம் பிடிக்க அனுமதி மறுப்பு
8. பிரசாதம் வழங்குவதில் 59 கோவில்களில் பாகுபாடு
9. கோவில் கலை நிகழ்ச்சிகளின் போது 64 கோவில்களில் தலித்துகள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.
10. பால்குடம், தீச்சட்டி போன்ற சடங்கின்போது 60 கோவில்களில் பாகு பாடுகள் கடைபிடிக்கப்படுகின்றன.

இவற்றை எல்லாம் களைய முதலில் அமைச்சர் சேகர்பாபு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பெரியாரிஸ்ட் அதி அசுரன் வலியுறுத்தி உள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications