வட மாநிலத்தவர்கள் தமிழகம் வருவதில் தவறில்லை! ஆனால் ஒரு கண்டிஷன்! சரத்குமார் முக்கிய டிமாண்ட்!
சமத்துவ மக்கள் கட்சியின் 7வது பொதுக்குழுவை ஈரோட்டில் இன்று நடத்திய சரத்குமார்.
சென்னை: வட மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டுக்கு வருவதில் தவறேதும் இல்லை என்றும் ஆனால் அவ்வாறு வருபவர்களின் விவரங்களை காவல் நிலையத்தில் முறைப்படி சேகரித்து பதிவு செய்ய வேண்டும் எனவும் சமக தலைவர் சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சியின் 7வது பொதுக்குழுவை ஈரோட்டில் இன்று நடத்திய அவர் செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார்.
அரசியல் கட்சியை தனி ஒருவராக இருந்து இத்தனை ஆண்டுகாலம் தொடர்ந்து நடத்தி வருவதுடன் நிர்வாகிகளையும் கட்டிகாத்து வருவது சரத்குமாரின் திறமையை காட்டுகிறது.

சமக பொதுக்குழு
சமத்துவ மக்கள் கட்சியின் 7வது பொதுக்குழு ஈரோட்டில் இன்று நடைபெற்றது. அதில் முறைப்படி போட்டியின்றி 7வது முறையாக அக்கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட சரத்குமார் மிக உற்சாகமாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டு தொடர்பான கேள்விகளை தவிர்த்த அவர் வட மாநிலத்தவர்கள் விவகாரம், நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்தெல்லாம் விளக்கமாக பேசினார்.

யாருடன் கூட்டணி?
அந்த வகையில் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை இன்னும் 2 மாதங்களில் நிர்வாகிகளுடன் பேசி முடிவெடுக்க உள்ளதாக தெரிவித்தார். அதேபோல் எல்லா கட்சிகளும் தனித்து போட்டியிட்டால் நன்றாக இருக்கும் எனவும் கூறினார். அதைத் தொடர்ந்து வட மாநிலத்தவர்கள் பிரச்சனை பற்றி பேசிய அவர், வட மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டுக்கு வருவதில் தவறேதும் இல்லை என்றும் ஆனால் அவ்வாறு வருபவர்களின் விவரங்களை காவல் நிலையத்தில் முறைப்படி சேகரித்து பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

வட மாநிலத்தவர்கள்
வட மாநிலத்தவர்களின் விவரங்களை காவல் நிலையத்தில் பதிய வேண்டும் என இன்று நேற்றல்ல 12 ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருப்பதாகவும் இப்போதும் அதையே தான் தாம் கூறுவதாகவும் தெரிவித்த சரத்குமார் யாரேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் எளிதாக தப்பிப்பதை தடுக்க முடியும் என்பதற்காகவே இதைக் கூறுவதாக விளக்கமும் அளித்தார்.

12 ஆண்டுகளுக்கு முன்
வட மாநிலத்தவர்களின் விவரங்களை காவல் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும் என அப்போது தாம் கூறிய போது பலரும் தன்னை வித்தியாசமாக பார்த்ததாகவும் ஆனால் இன்று தாம் சொல்லியபடி தான் ஒவ்வொரு நிகழ்வுகளும் நடந்து வருவதாகவும் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications