வட மாநிலத்தவர்கள் தமிழகம் வருவதில் தவறில்லை! ஆனால் ஒரு கண்டிஷன்! சரத்குமார் முக்கிய டிமாண்ட்!
சமத்துவ மக்கள் கட்சியின் 7வது பொதுக்குழுவை ஈரோட்டில் இன்று நடத்திய சரத்குமார்.
சென்னை: வட மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டுக்கு வருவதில் தவறேதும் இல்லை என்றும் ஆனால் அவ்வாறு வருபவர்களின் விவரங்களை காவல் நிலையத்தில் முறைப்படி சேகரித்து பதிவு செய்ய வேண்டும் எனவும் சமக தலைவர் சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சியின் 7வது பொதுக்குழுவை ஈரோட்டில் இன்று நடத்திய அவர் செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார்.
அரசியல் கட்சியை தனி ஒருவராக இருந்து இத்தனை ஆண்டுகாலம் தொடர்ந்து நடத்தி வருவதுடன் நிர்வாகிகளையும் கட்டிகாத்து வருவது சரத்குமாரின் திறமையை காட்டுகிறது.

சமக பொதுக்குழு
சமத்துவ மக்கள் கட்சியின் 7வது பொதுக்குழு ஈரோட்டில் இன்று நடைபெற்றது. அதில் முறைப்படி போட்டியின்றி 7வது முறையாக அக்கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட சரத்குமார் மிக உற்சாகமாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டு தொடர்பான கேள்விகளை தவிர்த்த அவர் வட மாநிலத்தவர்கள் விவகாரம், நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்தெல்லாம் விளக்கமாக பேசினார்.

யாருடன் கூட்டணி?
அந்த வகையில் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை இன்னும் 2 மாதங்களில் நிர்வாகிகளுடன் பேசி முடிவெடுக்க உள்ளதாக தெரிவித்தார். அதேபோல் எல்லா கட்சிகளும் தனித்து போட்டியிட்டால் நன்றாக இருக்கும் எனவும் கூறினார். அதைத் தொடர்ந்து வட மாநிலத்தவர்கள் பிரச்சனை பற்றி பேசிய அவர், வட மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டுக்கு வருவதில் தவறேதும் இல்லை என்றும் ஆனால் அவ்வாறு வருபவர்களின் விவரங்களை காவல் நிலையத்தில் முறைப்படி சேகரித்து பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

வட மாநிலத்தவர்கள்
வட மாநிலத்தவர்களின் விவரங்களை காவல் நிலையத்தில் பதிய வேண்டும் என இன்று நேற்றல்ல 12 ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருப்பதாகவும் இப்போதும் அதையே தான் தாம் கூறுவதாகவும் தெரிவித்த சரத்குமார் யாரேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் எளிதாக தப்பிப்பதை தடுக்க முடியும் என்பதற்காகவே இதைக் கூறுவதாக விளக்கமும் அளித்தார்.

12 ஆண்டுகளுக்கு முன்
வட மாநிலத்தவர்களின் விவரங்களை காவல் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும் என அப்போது தாம் கூறிய போது பலரும் தன்னை வித்தியாசமாக பார்த்ததாகவும் ஆனால் இன்று தாம் சொல்லியபடி தான் ஒவ்வொரு நிகழ்வுகளும் நடந்து வருவதாகவும் கூறினார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications