சொத்து வரியை உயர்த்த மத்திய அரசு சொல்லவில்லை...திரும்ப பெறுங்கள் - எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்
சொத்துவரியை கண்டிப்பாக உயர்த்த வேண்டும் என மத்திய அரசு எந்த இடத்திலும் சொல்லவில்லை. வாடகை வீட்டில் வசிப்போரும் சொத்துவரி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
சென்னை: சொத்து வரி உயர்வு மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்பதால் சொத்துவரியை திரும்பப் பெற வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். சொத்துவரியை கண்டிப்பாக உயர்த்த வேண்டும் என மத்திய அரசு எந்த இடத்திலும் சொல்லவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்வு குறித்து சட்டசபையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது. அதன்படி, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி , சொத்துவரி தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.
அவர் பேசுகையில், சொத்து வரி மக்கள் மீது பெரும் சுமையை சுமத்தியுள்ளது. மத்திய அரசு சொத்துவரியை உயர்த்த எந்த அறிவிப்புகள் செய்யவில்லை என்றும் தமிழக அரசு உயர்த்திய சொத்து வரியை திரும்ப பெறவேண்டும் எனவும் கூறினார். இந்நிலையில், அதிமுக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. இதேபோல சொத்து வரி உயர்வை கண்டித்து பாஜகவும் வெளிநடப்பு செய்தது.

பெரும் சுமை
சட்டசபையில் இருந்து வெளியே வந்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசுகையில், ஏற்கனவே கொரோனாவால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சொத்து வரி உயர்வு மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும். எனவே, சொத்துவரியை திரும்பப் பெற வேண்டும் என்றும் கூறினார்.

திமுக அரசின் தேர்தல் பரிசு
சொத்துவரியை கண்டிப்பாக உயர்த்த வேண்டும் என மத்திய அரசு எந்த இடத்திலும் சொல்லவில்லை. வாடகை வீட்டில் வசிப்போரும் சொத்துவரி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு தி.மு.க.வின் தேர்தல் பரிசே, சொத்துவரி உயர்வு என்று கூறினார். இதனையடுத்து அதிமுகவினர், தமிழக அரசு சொத்து வரியை திரும்பப் பெற வேண்டும் என முழக்கமிட்டனர்.
-
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
அவிநாசி: பாஜகவுக்காக.. அதிமுகவின் எஃகு கோட்டையை தாரை வார்த்த எடப்பாடி பழனிசாமி! தனபால் கதை ஓவர் -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்?












Click it and Unblock the Notifications