Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரொம்ப ஏமாற்றமா போயிட்டு.. தீபம் ஏற்றக்கூடிய நாள் வரும்.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மயிலாடுதுறையில் கம்பர் விழாவில் பேசிய உயர் நீதிமன்ற நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் விவகாரத்தை குறிப்பிடாமல் ’தீபம் ஏற்றகூடிய நாள் விரைவில் வரும்’ என்று கூறினார். தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் ஏற்படுகின்ற போரின்போது முதலில் தர்மத்துக்கு சிரமம் ஏற்படத்தான் செய்யும் எனவும், ஆனால் இறுதியில் அறமே வெல்லும் என்று சொல்வது கம்பராமாயணம் என அவர் பேசினார்.

கவிச்சக்கரவர்த்தி என்ற அழைக்கப்படும் கம்பர் பிறந்த ஊரான மயிலாடுதுறை மாவட்டம் தேரழுந்தூரில் கம்பர் விழா நேற்று இரவு நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன், "கம்பனும், வைணவமும்" என்ற நூலை வெளியிட்டார். அப்போது அதனை மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிபதி சத்தியமூர்த்தி பெற்றுக் கொண்டார். தொடர்ந்து நிழச்சியில் ஜி ஆர் சுவாமிநாதன் பேசியதாவது:-

the-day-to-light-the-lamp-will-come-says-high-court-judge-gr-swaminathan

ரொம்ப ஏமாற்றமா போயிட்டு..

நான் இன்று இந்த நிகழ்ச்சிக்கு வருகை தரும் போது சட்டக் கல்லூரி மாணவிகள் இருவர் என்னிடம் வந்து ஆட்டோகிராஃப் கேட்டனர். அவர்கள் நெற்றியில் நிறைய விபூதி இருந்தது. நம் சமய அடையாளங்களை இட்டுக்கொள்வதற்கு எந்த வித கூச்சமும் இருக்க கூடாது. அதற்காக அவர்களை நான் பாராட்டுகிறேன்.

தீபத்துக்கும் எனக்கும் என்ன பொறுத்தம் என்றே தெரியவில்லை. நான் வந்து குத்துவிளக்கிற்கு தீபம் ஏற்றுவதற்காக போனேன். ஆனால் ஐயா, நீங்கள் தீபம் ஏற்றக்கூடாது என்று சொல்லிவிட்டனர். நிகழ்ச்சி தொடங்கும் போது தீபம் ஏற்றப்படும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சொல்லியிருந்ததால் நான் சென்றேன்.

தீபம் ஏற்றும் நாள் விரைவில் வரும்

ஆனால் நிகழ்ச்சியில் பெண்களுக்கு தான் குத்துவிளக்கு ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனாலேயே அவர்கள் என்னை நீங்க ஏற்றக்கூடாது ஐய்யா.. என்று சொன்னார்கள். நீங்கள் ஏற்றவேண்டாம். அங்கேயே உட்காருங்கள் என்று சொல்லிவிட்டனர். எனக்கு ஏமாற்றமாக போய்விட்டது.. (நகைச்சுவையாக பேசினார்). தீபம் ஏற்றகூடிய நாள் விரைவில் வரும்.. என்று சிரித்துக்கொண்டே கூறினார்.

கம்பர் விழா

மேலும் நூலை வெளியிட்ட பிறகு பேசிய அவர், தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் ஏற்படுகின்ற போரின்போது முதலில் தர்மத்துக்கு சிரமம் ஏற்படத்தான் செய்யும் எனவும், ஆனால் இறுதியில் அறமே வெல்லும் என்று சொல்வது கம்பராமாயணம் என அவர் பேசினார்.

முன்னதாக தேரழந்தூர் கம்பர் கழகம் சார்பில் கம்பர் விழாவின் தொடக்கமாக ஆமருவியப்பன் கோயிலில் இருந்து கம்பர் கோட்டம் வரை ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவில் உச்சியில் தீபம் ஏற்றுமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். ஆனால் இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது என்றும், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கருதியும் வழக்கமாக ஏற்றப்படும் உச்சி பிள்ளையார் கோவில் அருகே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

நீதிபதி அவமதிப்பு வழக்கு தற்போது நடந்து வருகிறது. இந்த சூழலில் தான் கம்பர் விழாவில் பங்கேற்ற நீதிபதி, திருப்பரங்குன்றம் என்ற வார்த்தையை குறிப்பிடமால் தீபம் ஏற்றும் நாள் விரைவில் வரும் என கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+